மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

ஹாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது 'பேட்டில் ஆப் கல்வான்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். அபூர்வ லக்கியா என்பவர் இயக்கி வருகின்ற இந்த படத்தின் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக இரட்டை இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து இவர்களுக்கிடையே கடந்த மூன்று மாதங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக இவர்கள் சொன்ன கதை சல்மான் கானுக்கு ரொம்பவே பிடித்து விட்டதாம். அதாவது சினிமாவில் சூப்பர் ஹீரோவாக இருக்கும் ஒருவர் அது போரடித்து போய் அதை விட்டு ஒதுங்கி ஓய்வு பெற நினைக்கிறார். ஆனால் காலம் அவரை மீண்டும் அதே கதாபாத்திரங்களை செய்யும்படி இழுத்து வருகிறதாம். காமெடி மற்றும் ஆக்சன் கலந்து இந்த கதையை உருவாக்கி இருக்கிறார்களாம். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.