பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் | படையப்பா ரீ ரிலீஸில் வசூல் எவ்வளவு தெரியுமா? |

ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு அம்மாவாகியுள்ள தீபிகா படுகோனே, திருமணத்திற்கு பிறகும் உடல் கட்டை பிட்டாக பராமரித்தபடி சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது ஹிந்தியில் ஷாருக்கான் நடிக்கும் கிங் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருபவர், அதையடுத்து அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.
தீபிகா கூறுகையில், சில படங்களில் நடிக்க பெரிய அளவில் சம்பளம் தருவதாக சொல்லியும் நான் மறுத்து விட்டதாக சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை சம்பளம் மட்டுமே முக்கியம் இல்லை. எனக்கான ரோல் அழுத்தமாக இருக்க வேண்டும். கமர்சியலாக இருந்தாலும் அது பெரிய ரோலாக இருக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக அந்த கதையை சொல்லும் இயக்குனர் மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். இது போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டுதான் ஒரு படத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
பெரிய சம்பளத்திற்காக கண்ணை மூடிக்கொண்டு எந்த படத்தையும் நான் ஏற்பதில்லை என்று கூறி இருக்கும் தீபிகா படுகோனே, சிலர் சமூகத்துக்கு மெசேஜ் சொல்வதாக என்னிடத்தில் வருகிறார்கள். ஆனால் அப்படி அந்த இயக்குனர்கள் சொல்லக்கூடிய மெசேஜ் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதையும் நான் ஆராய்ந்து பார்க்கிறேன். அதில் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே அந்த படங்களை ஏற்கிறேன். இல்லாதபட்சத்தில் அந்த படங்களை தவிர்க்கிறேன். இதனால் என் மீது விமர்சனங்கள் எழுதுகிறது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படுவதில்லை என்று தெரிவித்திருக்கிறார் தீபிகா படுகோனே.