எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் |

மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக தயாராகி வரும் படம் விலாயத் புத்தா. எழுத்தாளர் இந்து கோபன் எழுதிய விலாயத் புத்தா நாவலை அடிப்படையாகக் கொண்டு அதேபெயரில் இந்த படம் உருவாகி வருகிறது. அய்யப்பனும் கோஷியும் புகழ் மறைந்த இயக்குனர் சாச்சி அவரது மறைவுக்கு முன் அடுத்ததாக இந்த படத்தை தான் இயக்க வேண்டும் என முடிவு செய்திருந்த நிலையில் தான் அது நிறைவேறாமலேயே இறந்து போனார்.
அதன்பிறகு அவருடைய சீடரான ஜெயன் நம்பியார் என்பவர் தற்போது இந்த படத்தை இயக்கியுள்ளார். மரக்கடத்தல் பின்னணியில் புஷ்பா பட பாணியில் இந்த படம் உருவாகி உள்ளது என அடுத்தடுத்து வெளியான டீசர்கள் மூலம் உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படம் வரும் நவம்பர் 21ஆம் தேதி வெளியாவதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.