சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தற்போது நடிகர் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரித்விராஜ் மற்றும் பிரியங்கா சோப்ரா இருவரும் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வருகின்ற நவம்பர் 15ம் தேதியன்று படத்தின் முதல் பார்வை மற்றும் தலைப்பை பிரமாண்ட விழா வைத்து வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் உங்களுக்கு பல அப்டேட்கள் காத்திருக்கிறது. ‛இன்று முதலில் பிரித்வியின் லுக்...' என்று ராஜமவுலி பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த வரிசையில் முதலாக இன்று இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரித்விராஜ் கதாபாத்திர முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் கும்பா எனும் கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளனர். நடக்க இயலாதவர்கள் பயன்படுத்தும் நவீன வாகனத்தில் பிரித்விராஜ் உள்ளார். அந்த வாகனத்தில் சூப்பர் ஹீரோ படங்களில் வருவது போன்று செயற்கையான சக்தி வாய்ந்த கைகள் உள்ளன.