தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் கடந்த 1987ம் ஆண்டு வெளியான படம் 'நாயகன்'. இப்படத்தில் கமலுடன் சரண்யா, கார்த்திகா, ஜனகராஜ், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, இளையராஜா இசை அமைத்திருந்தார். இப்படம் தமிழகத்தில் 200 நாட்களுக்கு மேல் ஓடியது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி இந்த நாயகன் படத்தை நேற்று வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் எஸ் .ஆர். பிலிம் பேக்டரி எஸ். ஆர் .ராஜன் என்பவர் நாயகன் படத்தின் ரீ ரிலீஸ்க்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நாயகன் படத்தின் வெளியீட்டு உரிமையை எங்கள் நிறுவனம் பெற்றிருந்த நிலையில் தற்போது வி. எஸ் .பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் அப்படத்தை முறைகேடாக ரிலீஸ் செய்கிறார்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் நாயகன் படத்தை ஒப்பந்த அடிப்படையில் ரீரிலீஸ் செய்வதால் அதற்கு தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளார். அதனால் இப்படத்தின் ரிலீஸ்க்கு ஏற்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு இருக்கிறது. அதோடு நீதிபதி செந்தில்குமார், நாயகன் படத்தை தான் 16 முறை பார்த்திருப்பதாகவும், காட்சி வாரியாக தன்னால் இந்த படத்தை மீண்டும் சொல்ல முடியும் என்றும் ஒரு கருத்து கூறியிருக்கிறார்.