ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி |
மலையாளத்தில் கடந்த வருடம் பிரித்விராஜ் மற்றும் பசில் ஜோசப் இருவரும் நடித்த குருவாயூர் அம்பல நடையில் திரைப்படம் வெளியாகி வெற்றியை பெற்றது. இதை விபின் தாஸ் இயக்கியிருந்தார். இதற்கு முன்னதாக அவர் பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுத்து இயக்கிய ஜெய ஜெய ஜெய ஜெய ஹே திரைப்படம் வரவேற்பு பெற்றது. இந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக மீண்டும் பிரித்விராஜை வைத்தே சந்தோஷ் டிராபி என்கிற படத்தை இயக்குகிறார்.
இதற்கு முன்பு குருவாயூர் அம்பல நடையில் படம் காமெடி மற்றும் கமர்சியல் அம்சங்களுடன் வெளியானது. ஆனால் இந்த சந்தோஷ் ட்ராபி படத்தை இயக்குனரின் விருப்பப்படி அவரது படமாக உருவாக்கும்படி நடிகர் பிரித்விராஜ் அன்பு கட்டளை போட்டு விட்டாராம். அதனால் அதற்கேற்றபடி இந்த படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் விபின் தாஸ்.
இதில் ஒரு புதிய விஷயமாக கிட்டத்தட்ட 60 புதுமுக நடிகர்கள் பிரித்விராஜுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர். இது விளையாட்டு சம்பந்தமான படம் என்பதால் இத்தனை புதுமுக நடிகர்களை ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது.