ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

மலையாளத்தில் கடந்த வருடம் பிரித்விராஜ் மற்றும் பசில் ஜோசப் இருவரும் நடித்த குருவாயூர் அம்பல நடையில் திரைப்படம் வெளியாகி வெற்றியை பெற்றது. இதை விபின் தாஸ் இயக்கியிருந்தார். இதற்கு முன்னதாக அவர் பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுத்து இயக்கிய ஜெய ஜெய ஜெய ஜெய ஹே திரைப்படம் வரவேற்பு பெற்றது. இந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக மீண்டும் பிரித்விராஜை வைத்தே சந்தோஷ் டிராபி என்கிற படத்தை இயக்குகிறார்.
இதற்கு முன்பு குருவாயூர் அம்பல நடையில் படம் காமெடி மற்றும் கமர்சியல் அம்சங்களுடன் வெளியானது. ஆனால் இந்த சந்தோஷ் ட்ராபி படத்தை இயக்குனரின் விருப்பப்படி அவரது படமாக உருவாக்கும்படி நடிகர் பிரித்விராஜ் அன்பு கட்டளை போட்டு விட்டாராம். அதனால் அதற்கேற்றபடி இந்த படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் விபின் தாஸ்.
இதில் ஒரு புதிய விஷயமாக கிட்டத்தட்ட 60 புதுமுக நடிகர்கள் பிரித்விராஜுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர். இது விளையாட்டு சம்பந்தமான படம் என்பதால் இத்தனை புதுமுக நடிகர்களை ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது.




