ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
பிரித்விராஜ் இயக்கத்தில் அவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ‛எல் 2 எம்புரான்' திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. அதற்கு முன்னதாக கடந்த வருடம் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ‛ஆடுஜீவிதம்' படம் அவரது நடிப்புக்கு விருதுகளை தேடித்தந்தது. ‛குருவாயூர் அம்பல நடையில்' திரைப்படத்திலும் காமெடியில் கலக்கியிருந்தார் பிரித்விராஜ். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் ஆக்சனுக்கு திரும்பியுள்ளார். அந்த வகையில் அவர் தற்போது நடித்து வரும் ‛விலாயத் புத்தா' திரைப்படம் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் பிரித்விராஜ் சந்தன மரம் கடத்தும் டபுள் மோகன் என்கிற கடத்தல்காரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கும் எதிர் தரப்புக்கும் ஏற்படும் மோதல் மற்றும் இவருக்கும் போலீசாருக்கும் ஏற்படும் மோதல் என கிட்டத்தட்ட டீசரை பார்க்கும்போதே ஒரு புஷ்பா பீல் ஏற்படுகிறது. ஆனால் அதற்கு பதில் அளிக்கும் வகையில் டீசரில் ஒரு பஞ்ச் வசனம் ஒன்றையும் வைத்துள்ளார்கள். பிரித்திவிராஜிடம் ஒரு போலீஸ் அதிகாரி, “நீ என்ன புஷ்பாவா?” என்று கேட்க, “ஐயோ சார்.. அவர் இன்டர்நேஷனல்.. நான் வெறும் லோக்கல்” என்று கிண்டலாக பதில் அளிப்பது போல் ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. டீசரை பார்க்கும்போதே படம் முழுக்க முழுக்க கமர்சியல் ஆக்சன் பாணியில் உருவாகியுள்ளது தெளிவாகவே தெரிகிறது.