30 ஆண்டுகளை நிறைவு செய்து 'முத்து, குருதிப்புனல்' | தீபிகா படுகோனே கூட 'டான்ஸ்' ஆடவும் ரெடி: சரத்குமார் | இந்த வாரம்... ரிலீஸ் இல்லாத வாரம் ? | ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு ‛ஜெய் பீம், வேட்டையன்' ஆகிய படங்களை இயக்கிய தா.சே. ஞானவேல், மலையாள நடிகர் மோகன்லாலிடம் 'தோசை கிங்' என்கிற படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கைகூடவில்லை. தற்போது மீண்டும் இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை தொடங்கி இறுதிகட்ட நிலையில் உள்ளது என மலையாள சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
இப்படம் சரவணபவன் உணவகத்தின் நிறுவனர் ராஜகோபால் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகிறது. இதில் குறிப்பாக ராஜகோபால், ஜீவா ஜோதி இருவர்கிடையே இருந்த மோதல் இதனால் ராஜகோபால் சிறை சென்றது வரை என பல சுவாரஸ்யமான விஷயங்கள் இந்த படத்தில் இடம்பெறும் என்கிறார்கள். ஜங்லி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கான திரைக்கதையை தா.சே. ஞானவேல் மற்றும் ஹேமந்த் ராவ் என இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.