பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு ‛ஜெய் பீம், வேட்டையன்' ஆகிய படங்களை இயக்கிய தா.சே. ஞானவேல், மலையாள நடிகர் மோகன்லாலிடம் 'தோசை கிங்' என்கிற படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கைகூடவில்லை. தற்போது மீண்டும் இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை தொடங்கி இறுதிகட்ட நிலையில் உள்ளது என மலையாள சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
இப்படம் சரவணபவன் உணவகத்தின் நிறுவனர் ராஜகோபால் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகிறது. இதில் குறிப்பாக ராஜகோபால், ஜீவா ஜோதி இருவர்கிடையே இருந்த மோதல் இதனால் ராஜகோபால் சிறை சென்றது வரை என பல சுவாரஸ்யமான விஷயங்கள் இந்த படத்தில் இடம்பெறும் என்கிறார்கள். ஜங்லி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கான திரைக்கதையை தா.சே. ஞானவேல் மற்றும் ஹேமந்த் ராவ் என இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.