பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ‛ஜெய் பீம், வேட்டையன்' ஆகிய படங்களை இயக்கிய தா.சே. ஞானவேல், மலையாள நடிகர் மோகன்லாலிடம் 'தோசை கிங்' என்கிற படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கைகூடவில்லை. தற்போது மீண்டும் இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை தொடங்கி இறுதிகட்ட நிலையில் உள்ளது என மலையாள சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
இப்படம் சரவணபவன் உணவகத்தின் நிறுவனர் ராஜகோபால் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகிறது. இதில் குறிப்பாக ராஜகோபால், ஜீவா ஜோதி இருவர்கிடையே இருந்த மோதல் இதனால் ராஜகோபால் சிறை சென்றது வரை என பல சுவாரஸ்யமான விஷயங்கள் இந்த படத்தில் இடம்பெறும் என்கிறார்கள். ஜங்லி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கான திரைக்கதையை தா.சே. ஞானவேல் மற்றும் ஹேமந்த் ராவ் என இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.