ஆஸ்கர் விருது - நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் |

கடந்த ஏப்ரல் மாதம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் தொடரும். தருண் மூர்த்தி இயக்கிய இப்படத்தில் கதாநாயகியாக ஷோபனா நடித்திருந்தார். குடும்ப கதை அம்சத்துடன் ஆக் ஷன் பின்னணி கலந்து உருவான இந்த படம் 230 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து மோகன்லாலும் இயக்குனர் தருண் மூர்த்தியும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்று சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் தருண் மூர்த்தி டைரக்ஷனில் மோகன்லால் நடிக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
தள்ளுமால, அஞ்சாம் பாதிரா உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த ஆசிக் உஸ்மான் புரடக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இயக்குனர் தருண் மூர்த்தி தற்போது பிரேமலு பட நாயகன் நஸ்லேனை வைத்து டார்பிட்டோ என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டு, அடுத்ததாக பிரித்விராஜ் நடிப்பில் ஆபரேஷன் கம்போடியா என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களின் வேலைகளும் முடிவடைந்த பிறகு மோகன்லால் படத்தை இயக்குவார் என தெரிகிறது.




