கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? |

கடந்த ஏப்ரல் மாதம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் தொடரும். தருண் மூர்த்தி இயக்கிய இப்படத்தில் கதாநாயகியாக ஷோபனா நடித்திருந்தார். குடும்ப கதை அம்சத்துடன் ஆக் ஷன் பின்னணி கலந்து உருவான இந்த படம் 230 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து மோகன்லாலும் இயக்குனர் தருண் மூர்த்தியும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்று சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் தருண் மூர்த்தி டைரக்ஷனில் மோகன்லால் நடிக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
தள்ளுமால, அஞ்சாம் பாதிரா உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த ஆசிக் உஸ்மான் புரடக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இயக்குனர் தருண் மூர்த்தி தற்போது பிரேமலு பட நாயகன் நஸ்லேனை வைத்து டார்பிட்டோ என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டு, அடுத்ததாக பிரித்விராஜ் நடிப்பில் ஆபரேஷன் கம்போடியா என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களின் வேலைகளும் முடிவடைந்த பிறகு மோகன்லால் படத்தை இயக்குவார் என தெரிகிறது.




