யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் | ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் | வேள்பாரிக்கு தீவிரம் காட்டும் ஷங்கர் : ஹீரோ யார்? | வதந்திகள் நல்ல விளம்பரம்: கிரிக்கெட் வீரருடன் நெருக்கம் பற்றி மிருணாள் தாக்கூர் | இந்தவாரம் 6 படங்கள் ரிலீஸ் : 2025 தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்குமா? | பிளாஷ்பேக்: முதல்வர் ஸ்டாலினுடன் நடித்த பாக்யஸ்ரீ | பிளாஷ்பேக்: திடீர் இயக்குனராகி, காணாமல் போன வில்லன் |

விஜய் விஷ்வா, சாக் ஷிஅகர்வால் நடித்த சாரா படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் காமெடியனாக யோகிபாபு நடிக்கிறார். ரஜித் கண்ணா இயக்கி, படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்துக்கு யோகிபாபு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில் 'இந்த படத்தில் யோகிபாபு காமெடியனாக நடித்துள்ளார். அவருக்கு எந்த சம்பள பாக்கியும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் சம்பளத்தை முன்பே வாங்கிக் கொள்கிறார். ஒரு நாளைக்கு 10 லட்சம் சம்பளம் என்ற விதம், 5 நாட்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே சம்பளம் கொடுத்தால்தான் படப்பிடிப்பு வருகிறார். தினமும் அவர் குழுவுக்கு பேட்டா கொடுக்க வேண்டும். படப்பிடிப்பு சமயத்தில் அதை மதியமே வாங்கிக் கொள்வார்கள். ஆனால், பின்னர் போன் எடுப்பதில்லை'' என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அதேசமயம் இந்த படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின், முக்கிய வேடத்தில் நடித்த பொன் வண்ணன், அம்மாவாக நடித்த அம்பிகாவும் பட பிரமோஷன்களில் கலந்து கொள்ளவில்லை.