‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் | அடுத்து கொரோனா வந்தால் சென்னை காலி ; பொள்ளாச்சியில் செட்டில் ஆக ஆசை: விஜய் ஆண்டனி | சாய் பல்லவிக்கு எழுதப்பட்ட கதையில் நடித்த சமந்தா | ஆர்யா 40 : படப்பிடிப்பு நிறைவு | ஜூன் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | எவ்வளவு காலம் முடியுமா அவ்வளவு காலம் கார் ரேஸ் : அஜித் பேட்டி | 'கருப்பு' - இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் | ரூ.230 கோடி வசூலைக் கடந்த 'பெத்தி' |

விஜய் விஷ்வா, சாக் ஷிஅகர்வால் நடித்த சாரா படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் காமெடியனாக யோகிபாபு நடிக்கிறார். ரஜித் கண்ணா இயக்கி, படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்துக்கு யோகிபாபு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில் 'இந்த படத்தில் யோகிபாபு காமெடியனாக நடித்துள்ளார். அவருக்கு எந்த சம்பள பாக்கியும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் சம்பளத்தை முன்பே வாங்கிக் கொள்கிறார். ஒரு நாளைக்கு 10 லட்சம் சம்பளம் என்ற விதம், 5 நாட்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே சம்பளம் கொடுத்தால்தான் படப்பிடிப்பு வருகிறார். தினமும் அவர் குழுவுக்கு பேட்டா கொடுக்க வேண்டும். படப்பிடிப்பு சமயத்தில் அதை மதியமே வாங்கிக் கொள்வார்கள். ஆனால், பின்னர் போன் எடுப்பதில்லை'' என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அதேசமயம் இந்த படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின், முக்கிய வேடத்தில் நடித்த பொன் வண்ணன், அம்மாவாக நடித்த அம்பிகாவும் பட பிரமோஷன்களில் கலந்து கொள்ளவில்லை.