பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

அந்தக் காலத்தில் 'கவர்ச்சி வில்லன்' என்ற ஒரு பிரிவு இருந்தது. பி.எஸ்.வீரப்பா, நம்பியார் உள்ளிட்ட சிலர் அப்படிப்பட்டவர்கள். அதாவது ஹீரோவுக்கு இணையான அழகுடன் இருப்பவர்களை அப்படி அழைத்தார்கள். அந்த வகையில் கவர்ச்சி வில்லனாக இருந்தவர் எஸ்.ஏ.நடராஜன்.
வெண்கலக்குரல். வசனம் பேசும் தனிப்பாணி. சிரித்துக் கொண்டே வசனம் பேசுவது இவரது தனிச்சிறப்பு. எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கிய 'மந்திரிகுமாரி' படத்தில் எம்ஜிஆருக்கு வில்லனாக நடித்து புகழ்பெற்றார். சிவாஜிகணேசனுடன் 'மனோகரா' படத்திலும் கருணாநிதியின் வசனத்தை இவர் பேசிய விதமும் பேசப்பட்டது. கைதி, ரோகினி, முல்லை வனம், கோகிலவாணி, அமுதவல்லி, பாண்டித்தேவன் போன்றவை இவர் நடித்த முக்கிய படங்கள்.
வில்லனாக உச்சத்தில் இருந்தபோது இவருக்கு திடீரென படம் இயக்கும் ஆசை வந்தது.”நல்ல தங்கை” என்ற படத்தை இவரே தயாரித்து இயக்கினார். முக்கிய வேடத்திலும் நடித்தார். நம்பியார்தான் ஹீரோ. இப்படம் 1955ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்றது. இதனால் மேலும் ஒரு சில படங்களை இவர் தயாரித்து அவை வெற்றி பெறாததால் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி ஒரு கட்டத்தில் திரையுலகை விட்டே விலகினார்.