சிறிய வெற்றிகளுக்கு பெரிய இதயங்கள் தேவை: 'ஹாட்ரிக்' வெற்றியால் மணிகண்டன் நெகிழ்ச்சி | விவாகரத்து கோரி ஜிவி பிரகாஷ், சைந்தவி மனு தாக்கல் | சலார் சிறுவனை எம்புரானில் நடிக்க வைத்தது ஏன் ? பிரித்விராஜ் ருசிகர தகவல் | சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் ; வழக்கு விசாரணையை முடித்த சிபிஐ | ராபின் ஹுட் புரமோஷனுக்காக ஹைதராபாத் வந்த டேவிட் வார்னர் | ராஷ்மிகா மகளுடனும் ஜோடியாக நடிப்பேன் : சல்மான்கான் | எதுக்கு கடைசி நேர டென்ஷன் ? பிரித்விராஜ் நெத்தியடி கேள்வி | மலையாளப் படத்திற்கு முக்கியத்துவம் தரும் ரெட் ஜெயண்ட்? | பிரியதர்ஷினின் 100வது படத்தில் நடிப்பதை உறுதி செய்த மோகன்லால் | கும்பகோணம் கோவில்களில் சோபிதா துலிபலா சாமி தரிசனம் |
சமீபத்தில் வெளியான சலார் திரைப்படத்தில் வில்லனாக நடித்த பிரித்விராஜ் தெலுங்கில் மட்டுமல்ல தற்போது தனது சொந்த மொழியான மலையாளத்தில் உருவாகி வரும் குருவாயூர் அம்பலநடையில் என்கிற படத்திலும் ஒரு வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜெய ஜெய ஜெய ஜெய ஹே என்கிற படத்தை இயக்கிய விபின் தாஸ் என்பவர் தான் இந்த படத்தை இயக்குகிறார்.
அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த மின்னல் முரளி பட இயக்குனர் பசில் ஜோசப் கதாநாயகனாக நடிக்கிறார். இது தவிர நடிகர் யோகிபாபு இந்த படத்தில் நடிப்பதன் மூலம் முதன்முறையாக மலையாள திரை உலகில் அடி எடுத்து வைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக நிகிலா விமல் மற்றும் அனஸ்வரா ராஜன் இருவரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.