ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் | கதாசிரியர் ஆன தமன் | பிளாஷ்பேக் : தமிழில் ஹீரோவாக நடித்த விஷ்ணுவர்தன் | பிளாஷ்பேக் : சிவாஜி பட தலைப்பில் நடித்த எம்.ஜி.ஆர் | குறுக்கு வழியில் முன்னேறும்போது 4 வருடம் போராடி ஜெயித்துள்ளேன் : புதுமுக நடிகை அதிரடி | ஹரிஹர வீரமல்லு - எந்த 'கட்'டும் இல்லாமல் ‛யு/ஏ' சான்று | ‛புதிய பயணம்...' : ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன் | ‛இந்தியன் 3' : மீண்டும் உருவாக ரஜினிகாந்த் தலையீடு | ஜெனிலியா எதிர்பார்க்கும் வேடம்... : மீண்டும் தமிழில் நடிக்க வருவாரா? | சினிமா டிக்கெட் கட்டணம் : கர்நாடகாவில் புதிய அறிவிப்பு |
சமீபத்தில் வெளியான சலார் திரைப்படத்தில் வில்லனாக நடித்த பிரித்விராஜ் தெலுங்கில் மட்டுமல்ல தற்போது தனது சொந்த மொழியான மலையாளத்தில் உருவாகி வரும் குருவாயூர் அம்பலநடையில் என்கிற படத்திலும் ஒரு வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜெய ஜெய ஜெய ஜெய ஹே என்கிற படத்தை இயக்கிய விபின் தாஸ் என்பவர் தான் இந்த படத்தை இயக்குகிறார்.
அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த மின்னல் முரளி பட இயக்குனர் பசில் ஜோசப் கதாநாயகனாக நடிக்கிறார். இது தவிர நடிகர் யோகிபாபு இந்த படத்தில் நடிப்பதன் மூலம் முதன்முறையாக மலையாள திரை உலகில் அடி எடுத்து வைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக நிகிலா விமல் மற்றும் அனஸ்வரா ராஜன் இருவரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.