காதலாகி, கசிந்துருகி… பிரிவாகி… - தமிழ் சினிமா பிரபலங்களின் பிரிவுகள் | யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ்? | ஜூன் 1ல் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா | மே. 24ல் வெளியாகும் பி.டி. சார் | 'கில்லி' - 25 நாளில் இத்தனை கோடி வசூலா ? | இரண்டே நாளில் அஜித்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? | கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குகிறேனா? - நடிகர் பாலா அதிரடி பதில் | சூர்யா படத்தில் ஹாலிவுட் பைட் மாஸ்டர் | தெலங்கானாவில் 10 நாட்களுக்கு தியேட்டர்களை மூட முடிவு | சைந்தவி உடனான பிரிவை வைத்து விவாதம் : தமிழர் மாண்பு குறைந்து விட்டதா என ஜிவி பிரகாஷ் ஆதங்கம் |
சமீபத்தில் வெளியான சலார் திரைப்படத்தில் வில்லனாக நடித்த பிரித்விராஜ் தெலுங்கில் மட்டுமல்ல தற்போது தனது சொந்த மொழியான மலையாளத்தில் உருவாகி வரும் குருவாயூர் அம்பலநடையில் என்கிற படத்திலும் ஒரு வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜெய ஜெய ஜெய ஜெய ஹே என்கிற படத்தை இயக்கிய விபின் தாஸ் என்பவர் தான் இந்த படத்தை இயக்குகிறார்.
அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த மின்னல் முரளி பட இயக்குனர் பசில் ஜோசப் கதாநாயகனாக நடிக்கிறார். இது தவிர நடிகர் யோகிபாபு இந்த படத்தில் நடிப்பதன் மூலம் முதன்முறையாக மலையாள திரை உலகில் அடி எடுத்து வைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக நிகிலா விமல் மற்றும் அனஸ்வரா ராஜன் இருவரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.