சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை சினிமாவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட இயக்குனர் ஷங்கர், அதற்கான உரிமையை வாங்கி வைத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பே வேள்பாரி நாவலுக்கு திரைக்கதை எழுதி வைத்துள்ளார். கடந்த ஆண்டே அந்த நாவலை சினிமாவாக்க முயற்சிகள் எடுத்தார். சூர்யாவை வைத்து படமாக்க முயற்சிகள் செய்தார். அஜித்திடம் கூட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர், இந்தியன் 2 படங்கள் படு தோல்வி அடைந்து, பல கோடி இழப்பை ஏற்படுத்த வேள்பாரி அடுத்த கட்டத்தக்கு நகராமல் தவித்தது.
இந்தியன் 3 படத்தை முடிக்கிற வேலைகளில் ஷங்கர் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது வேள்பாரி நாவலை சினிமாவாக்க ஷங்கர் மீண்டும் முயற்சிக்கிறார். அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்க உள்ளது என ஷங்கர் தரப்பில் இருந்து நேற்று செய்திகள் கசிய விடப்பட்டுள்ளது. வேள்பாரி நாவலில் ஹீரோவாக நடிப்பது யார்? தயாரிப்பது யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
கங்குவா தோல்வி காரணமாக, வரலாற்று படங்களில் நடிப்பது இல்லை என சூர்யா முடிவெடுத்துவிட்டார். அஜித்தும் ஆர்வம் காண்பிக்கவில்லை. கேம் சேஞ்சர் அனுபவத்தால் ராம் சரணும் மறுக்கிறார் என சொல்லப்படும் நிலையில், யாரை வைத்து ஷங்கர் படத்தை இயக்கப் போகிறார். வேள்பாரி படம் 3 பாகங்களாக வரும் என்று கூறப்படுவதால் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி முதலீட்டை, வரிசையாக தோல்வி படம் கொடுத்த ஷங்கரை நம்பி யார் கொடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.




