காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தென்னிந்திய சினிமாவின் ஷோமேன் என்று பாராட்டப்பட்டு வந்த இயக்குனர் ஷங்கர், ‛இந்தியன்- 2 , கேம் சேஞ்சர்' படங்களின் தோல்வியால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.
இந்த நிலையில் தான் சமீபத்தில் சு.வெங்கடேசன் எழுதிய ‛வேள்பாரி' நாவலை அடுத்து படமாக்கப் போவதாகவும், அது தனது கனவு படம் என்றும் அறிவித்தார் ஷங்கர். அதோடு, வேள்பாரியை ஜேம்ஸ் கேமரூனின் ‛அவதார்' போன்ற உலகளாவிய படங்களுடன் ஒப்பிட்டார். அதோடு, ‛கேம் ஆப் த்ரோன்சை' விட பிரமாதமாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
அவரது இந்த பேச்சு குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானதை அடுத்து பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள். அதோடு, இயக்குனர் ஷங்கர் மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களை செய்வதற்கு பதிலாக வலுவான படங்களை கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் விமர்சித்து வருகிறார்கள்.