எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்' | சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி | 'பெத்தி' படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை | மே 14ல் நெட்பிளிக்சில் வெளியாகும் 'துரந்தர்-2' | ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன அட்வைஸ் : இன்றைக்கும் கடைபிடிக்கிறாராம் ஜெய் | விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளாரே, எப்படி பார்க்கிறீர்கள்? மீடியாக்கள் கேள்விக்கு ரஜினியின் ரியாக்சன்! | ரஜினி, கமலுக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய் | 75 நாளில் 90 கோடி வசூலித்த ராதிகாவின் தாய் கிழவி! | அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் |

தென்னிந்திய சினிமாவின் ஷோமேன் என்று பாராட்டப்பட்டு வந்த இயக்குனர் ஷங்கர், ‛இந்தியன்- 2 , கேம் சேஞ்சர்' படங்களின் தோல்வியால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.
இந்த நிலையில் தான் சமீபத்தில் சு.வெங்கடேசன் எழுதிய ‛வேள்பாரி' நாவலை அடுத்து படமாக்கப் போவதாகவும், அது தனது கனவு படம் என்றும் அறிவித்தார் ஷங்கர். அதோடு, வேள்பாரியை ஜேம்ஸ் கேமரூனின் ‛அவதார்' போன்ற உலகளாவிய படங்களுடன் ஒப்பிட்டார். அதோடு, ‛கேம் ஆப் த்ரோன்சை' விட பிரமாதமாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
அவரது இந்த பேச்சு குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானதை அடுத்து பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள். அதோடு, இயக்குனர் ஷங்கர் மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களை செய்வதற்கு பதிலாக வலுவான படங்களை கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் விமர்சித்து வருகிறார்கள்.




