தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

'அருவி, வாழ்' போன்ற படங்களை இயக்கியவர் அருண் பிரபு. அதையடுத்து விஜய் ஆண்டனியின் 25வது படமான 'சக்தி திருமகன்' படத்தை இயக்கினார். கடந்த செப்டம்பர் 19ம் தேதி திரைக்கு வந்த இப்படம் கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படத்தில் பணக்காரர்களிடமிருந்து பணத்தை திருடி இல்லாதவர்களுக்கு கொடுக்கிறார் விஜய் ஆண்டனி. அந்த வகையில் இந்த படம் ஏற்கனவே இயக்குனர் ஷங்கர், அர்ஜுன் நடிப்பில் இயக்கிய முதல் படமான 'ஜென்டில்மேன்' கதை பாணியில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் ஷங்கர் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ''சக்தி திருமகன் படத்தை ஓடிடியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் அருண் பிரபு எழுப்பி உள்ள கேள்விகள் நியாயமானதாக உள்ளது. இது சிந்தனையை தூண்டும் படம். இந்த படத்தில் பல பிரச்னைகள் குறித்து விவாதித்து இருக்கிறார். அதோடு எதிர்பாராத விதத்தில் கதைக்களம் தீவிரமடைந்து கொண்டே இருக்கிறது. இயக்குனர் அருண் பிரபுக்கு ஹாட்ஸ் ஆப். விஜய் ஆண்டனி மற்றும் பட குழுவுக்கு வாழ்த்துக்கள்'' என்று தனது பாராட்டுகளை பதிவிட்டுள்ளார் இயக்குனர் ஷங்கர்.