தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

இசை ஆசிரியையாக வேண்டும் என்பதற்காகவே முறைப்படி இசை படித்தவர் சித்ரா. திருவனந்தபுரம் வானொலி நிலையத்தில் பாடிக்கொண்டிருந்தபோது ஜேசுதாசின் அறிமுகம் கிடைத்து. அவரது கச்சேரிகளில் பாடினார். அதன் மூலம் மலையாள சினிமா வாய்ப்பு வந்தது.
அவரது இசை ஆசிரியர் ரவீந்திரன் மாஸ்டர்தான் அவரை சென்னைக்கு அழைத்து வந்தார். மலையாள இயக்குனர் பாசிலின் சிபாரிசு மூலம் இளையராஜாவை சந்தித்தார். பாசில் மலையாளத்தில் இயக்கிய 'நோக்காத தூரத்து கண்ணும்நட்டு' என்ற படத்தை தமிழில் 'பூவே பூச்சூடவா' என்ற பெயரில் இயக்க தீர்மானித்திருந்தார். இளையராஜாவை இசை அமைப்பாளராக தேர்வு செய்திருந்தார்.
மலையாளப் படத்தில் இளம் பெற்ற 'கிளியே... கிளியே...' என்ற பாடல் இளையராஜாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த பெண்ணையே பூவே பூச்சூடவா என்ற பாடலை பாட வைக்கலாம் எனறு இளையராஜா கூறியிருந்தார். அதனால் சித்ராவை இளையராஜாவை சந்திக்கச் சொன்னார் பாசில். சித்ராவை வாய்ஸ் டெஸ்ட் எடுத்த இளையராஜா அன்றே அவரை ஒரு பாடல் பாடவைத்தார். பாரதிராஜா இயக்குவதாக இருந்த 'பச்சைக்கொடி' என்ற படத்திற்காக பதிவு செய்யப்பட்ட பாடல் அது. "பூஜைக்கேத்த பூவிது..." என்ற பாடலை கங்கை அமரனோடு இணைந்து பாடினார்.
ஆனால் அந்த படம் எடுக்கப்படாததால் சித்ரா மனதொடிந்து போனார். ஆனால் பின்னர் அந்த பாடல் 'நீதானா அந்த குயில்' என்ற படத்தில் பயன்படுத்தப்பட்டது. இந்த படத்தை கதாசிரியர் கே.செல்வராஜ் இயக்கினார். ராஜா, ராஜீவ், லட்சுமி, ரஞ்சனி நடித்தனர்.