கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொது செயலாளரான ரா.முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் படம் 'அரிசி'. எஸ்.ஏ.விஜயகுமார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். இதில் அறிவு மற்றும் வேடன் ஆகியோர் இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளனர்.
அது குறித்து இயக்குனர் கூறுகையில், ''இப்படத்தின் பணிகள் நிறைவடைந்திருக்கும் தருணத்தில், விவசாயத்தை பற்றிய பாடல் ஒன்றை இளையராஜா உருவாக்கி இருக்கிறார். அந்தப் பாடலை பாடலாசிரியர் அறிவு எழுத, பிரபல பாடகரான வேடன் மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். விவசாயிகளின் போராட்டக்கரமான வாழ்வை விவரிக்கும் வகையில் அந்த பாடல் கரு உருவாகி உள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி மாத இறுதியில் நடைபெறும். பிப்ரவரி மாதம் படம் ரிலீஸ்'' என்கிறார். கேரளாவில் முன்னணி பாடகராக இருக்கிறார் வேடன். அவரின் கச்சேரிகளுக்கு அங்கே தனி மவுசு. தமிழகத்தில் அறிவு பாடல்களுக்கு தனி வரவேற்பு உள்ளது. இவர்கள் இளையராஜாவுடன் இணைந்துள்ளனர்.




