'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் | கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் | பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு |

இசையமைப்பாளர் இளையராஜா, 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜா இயற்றிய மேற்கத்திய கிளாசிக்கல் இசை தொகுப்பான, 'வேலியன்ட்' சிம்பொனியை, லண்டனில் கடந்தாண்டு அரங்கேற்றி அசத்தினார். சிம்பொனியை அரங்கேற்றிய முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார். அவருக்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அடுத்த சிம்பொனியை எழுதப்போவதாகவும் அறிவித்திருந்தார் இளையராஜா.
இந்த நிலையில், இன்று தனது எக்ஸ் பக்கத்தில் இளையராஜா வெளியிட்ட பதிவில், 'பிப்ரவரி 3, 2026ம் தேதியான இன்றுடன் இந்த புதிய ஸ்டுடியோவிற்கு வந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. மேலும், எனது இரண்டாவது சிம்பொனியின் எழுத்துப் பணியும் கிட்டத்தட்ட முடிந்தது' எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் 2வது சிம்பொனியை முடித்து, விரைவில் அதையும் அரங்கேற்றம் செய்து சாதிக்க உள்ளார்.