எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் |

ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் மிருணாள் தாக்கூர், தனுசுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூட செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஹிந்தியில் சித்தாந்த் சதுர்வேதியுடன் மிருணாள் தாக்கூர் நடித்துள்ள தோ தீவானே செகர் மெய்ன் என்ற படம் வருகிற பிப்ரவரி 20ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் மிருணாள் தாக்கூர்.
தனது கடந்த கால காதல் பிரேக்கப் ஆனது குறித்த ஒரு தகவலை அவர் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ‛‛நான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன். அவர் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால் ஒரு கட்டத்தில் நீ நடிகையாக இருப்பதால் உன்னை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. என் குடும்பத்திற்கு நீ செட்டாக மாட்டாய் என்று சொல்லி என்னுடனான காதலை அவர் பிரேக் செய்து விட்டார். இந்த விஷயம் அப்போது எனக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தியது என்றார் மிருணாள்.