பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? | பிளாஷ்பேக்: புதுப்புது அனுபவங்களோடு 'த்ரில்லர்' கதையாக வந்து, திகைப்பில் ஆழ்த்திய சிவாஜியின் “புதியபறவை” | மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனரின் அடுத்த படம் | காதல் கொண்டேன் 2 வரும் : சோனியா அகர்வால் தகவல் | ஒரே வாரத்தில் 17 மில்லியன் பார்வைகளைப் பெற்ற 'மோனிகா' பாடல் | எளிமையாக நடந்த தலைவன் தலைவி வெற்றி விழா |
நடிகர் யோகிபாபு ஒரு பக்கம் முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் கதையம்சம் கொண்ட படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த படங்களும் வரவேற்பு பெறுவதுடன் வியாபார ரீதியாகவும் வெற்றியை பெற்று வருகின்றன. தற்போது ஜோரா கைய தட்டுங்க என்கிற படத்திலும் கதையின் நாயகனாக நடித்துள்ளார் யோகிபாபு. இந்த படத்தை வினீஸ் மில்லேனியம் என்பவர் இயக்கியுள்ளார்.
இதில் ஒரு மேஜிக் கலை நிபுணர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் யோகிபாபு. இதற்காக பிரபல மேஜிக் கலைஞர் ஒருவரிடம் பல நாட்கள் பயிற்சி எடுத்து நடித்துள்ளார் யோகிபாபு. ஒரு காலத்தில் மேஜிக் கலை நிபுணராக புகழ்பெற்ற தனது தந்தையைப் போலவே தானும் மாற வேண்டும் என நினைக்கும் மகன் அதற்காக எடுக்கும் முயற்சிகளும் அவை அவருக்கு கை கொடுத்ததா என்பதையும் மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளதாம்.