விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி | 'தாய்கிழவி' நல்ல லாபம்; அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் சிவகார்த்திகேயன் | சூரி, ரவிக்குமார் படத்தின் கதை என்ன தெரியுமா... | என்னை வேறொரு கோணத்தில் காட்டும் படம்: ஜதின் சர்னா | பாராட்டுகளை பெற்ற 'லிட்டில் விங்க்ஸ்': உயிரோடு இல்லாத இருவர் |

நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் பிப்ரவரி 26ம் தேதி நாளை உதய்பூரில் உள்ள ஐடிசி ஹோட்டலில் நடைபெற உள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களும் பங்கேற்க உள்ளார்கள். அவர்கள் இருவரின் மரபுகளின்படி இந்த திருமணம் நடைபெற உள்ளது.
முன்னதாக , விஜய் தேவரகொண்டாவின் பெற்றோர் பிரதமர் மோடிக்கு திருமண அழைப்பிதழ் அனுப்பி உள்ளார்கள். இந்நிலையில் மணமக்களை வாழ்த்தி பிரதமர் மோடி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், விஜய் தேவரகொண்டா மற்றும் மந்தனா குடும்பங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திருமணம் தம்பதியரின் வாழ்க்கையில் ஒரு அழகான புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும். வாழ்நாள் முழுவதும் நட்பு மற்றும் திருமணத்தில் தோழமையுடன் வாழ வேண்டும். கனவுகள், அன்பு, பரஸ்பரம், மரியாதை மற்றும் புரிதல் நிறைந்த எதிர்காலம் அமையும் என்று வாழ்த்தி தனது ஆசீர்வாதத்தை தெரிவித்திருக்கிறார்.