பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் பிப்ரவரி 26ம் தேதி நாளை உதய்பூரில் உள்ள ஐடிசி ஹோட்டலில் நடைபெற உள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களும் பங்கேற்க உள்ளார்கள். அவர்கள் இருவரின் மரபுகளின்படி இந்த திருமணம் நடைபெற உள்ளது.
முன்னதாக , விஜய் தேவரகொண்டாவின் பெற்றோர் பிரதமர் மோடிக்கு திருமண அழைப்பிதழ் அனுப்பி உள்ளார்கள். இந்நிலையில் மணமக்களை வாழ்த்தி பிரதமர் மோடி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், விஜய் தேவரகொண்டா மற்றும் மந்தனா குடும்பங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திருமணம் தம்பதியரின் வாழ்க்கையில் ஒரு அழகான புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும். வாழ்நாள் முழுவதும் நட்பு மற்றும் திருமணத்தில் தோழமையுடன் வாழ வேண்டும். கனவுகள், அன்பு, பரஸ்பரம், மரியாதை மற்றும் புரிதல் நிறைந்த எதிர்காலம் அமையும் என்று வாழ்த்தி தனது ஆசீர்வாதத்தை தெரிவித்திருக்கிறார்.