வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கடந்த ஐந்து ஆண்டுகளாக 100 ரசிகர்களை சுற்றுலாவுக்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடத்த டிசம்பர் மாதம் 25ம் தேதி ஐந்து பகுதிகளை குறிப்பிட்டு, இதில் இந்த ஆண்டு எந்த பகுதிக்கு சுற்றுலா செல்லலாம் என்று ரசிகர்களிடத்தில் ஒரு கருத்து கேட்டிருந்தார்.
விஜய் தேவரகொண்டா கூறுகையில், அன்பானவர்களே புத்தாண்டு வாழ்த்துக்கள். இதோ தேவரசண்டா அப்டேட் வந்துவிட்டது. உங்களில் 100 பேரை தேர்வு செய்து அனைத்து செலவுகளையும் செய்து விடுமுறைக்கு அனுப்பப் போகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
உணவு, பயணம், தங்குமிடம் மூன்றும் என்னுடைய செலவு என்று கூறி இருந்தேன். நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதையும் கேட்டிருந்தேன். அனைவருமே மலைப்பகுதிக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்திருந்தீர்கள். அதனால் உங்களில் 100 பேரை ஐந்து நாட்களுக்கு மணாலிக்கு அழைத்துச் செல்ல உள்ளேன். பனி மழையை பார்க்கப் போகிறீர்கள். அங்குள்ள கோயில்கள், மரங்கள் ஆகியவற்றை பார்க்க போகிறீர்கள். நாமெல்லாம் இணைந்து நிறைய நிகழ்ச்சிகளை செய்யப் போகிறோம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், தான் சொன்னபடியே 100 ரசிகர்களை தற்போது மணாலிக்கு அழைத்து சென்றுள்ளார் விஜய தேவர கொண்டா. அதையடுத்து ரசிகர்களுடன் விமானத்தில் செல்லும் வீடியோ மற்றும் அங்கு ஆடம்பரமான ஓட்டலில் அவர்கள் தங்கி இருக்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.




