அரசியலில் ஜீரோ-வைக் கண்டுபிடித்த பவன் கல்யாண் : ராம் கோபால் வர்மா காட்டம் | மூன்று மொழிகளில் உருவாகும் தனுஷின் 51வது படம் | வசூலை குவிக்கும் அனிமல் : ரன்பீர் கபூருக்கு முதல் ரூ.500 கோடி படம் | கன்னடத்தில் அறிமுகமாகும் சாய் பல்லவி : யஷ் ஜோடி ஆகிறார் | பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதற்காக வருந்த மாட்டேன் : வனிதா மகள் கடிதம் | மம்முட்டி படத்துக்கு திடீர் எதிர்ப்பு | வாங்கிய அடி, உதை, காயங்கள் எல்லாமே நிஜம் : கல்யாணி பிரியதர்ஷன் நெகிழ்ச்சி | நடிகர் ரஹ்மானின் மகள் திருமணத்திற்காக ஒன்றுகூடிய 80ஸ் நட்சத்திரங்கள் | ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாத போது, பேஷன் ஷோ எதுக்கு? - பார்த்திபன் | அரசாங்கம் எங்கே ? : அதிதி பாலன் கேள்வி |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கடந்த ஐந்து ஆண்டுகளாக 100 ரசிகர்களை சுற்றுலாவுக்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடத்த டிசம்பர் மாதம் 25ம் தேதி ஐந்து பகுதிகளை குறிப்பிட்டு, இதில் இந்த ஆண்டு எந்த பகுதிக்கு சுற்றுலா செல்லலாம் என்று ரசிகர்களிடத்தில் ஒரு கருத்து கேட்டிருந்தார்.
விஜய் தேவரகொண்டா கூறுகையில், அன்பானவர்களே புத்தாண்டு வாழ்த்துக்கள். இதோ தேவரசண்டா அப்டேட் வந்துவிட்டது. உங்களில் 100 பேரை தேர்வு செய்து அனைத்து செலவுகளையும் செய்து விடுமுறைக்கு அனுப்பப் போகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
உணவு, பயணம், தங்குமிடம் மூன்றும் என்னுடைய செலவு என்று கூறி இருந்தேன். நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதையும் கேட்டிருந்தேன். அனைவருமே மலைப்பகுதிக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்திருந்தீர்கள். அதனால் உங்களில் 100 பேரை ஐந்து நாட்களுக்கு மணாலிக்கு அழைத்துச் செல்ல உள்ளேன். பனி மழையை பார்க்கப் போகிறீர்கள். அங்குள்ள கோயில்கள், மரங்கள் ஆகியவற்றை பார்க்க போகிறீர்கள். நாமெல்லாம் இணைந்து நிறைய நிகழ்ச்சிகளை செய்யப் போகிறோம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், தான் சொன்னபடியே 100 ரசிகர்களை தற்போது மணாலிக்கு அழைத்து சென்றுள்ளார் விஜய தேவர கொண்டா. அதையடுத்து ரசிகர்களுடன் விமானத்தில் செல்லும் வீடியோ மற்றும் அங்கு ஆடம்பரமான ஓட்டலில் அவர்கள் தங்கி இருக்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.