கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் | மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் | கமல், அஜித் பட அப்டேட்: தீபாவளி பரிசாக வருமா? | மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் | படப்பிடிப்புக்கு 5 நாட்களுக்கு முன்புதான் பைசன் படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன்! - துருவ் விக்ரம் | ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் இணைந்த பார்த்திபன் | பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு : நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு | 'கோச்சடையான்' பட விவகாரம் : ரஜினி மனைவி லதாவுக்கு சிக்கல் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ்! |
ஒரு காலத்தில் நீலப்பட நடிகையாக பிரபலமாகி பின்னர் சினிமாவில் நுழைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடுபவராகவும் கதையின் நாயகியாகவும் நடித்து தற்போது அதிக அளவில் ரசிகர்களை பெற்றிருப்பவர் நடிகை சன்னி லியோன். தமிழ், மலையாள படங்களிலும் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். இவருக்கு நிஷா என்கிற மகளும் நோவா மற்றும் அஸர் என்கிற இரண்டு மகன்களும் இருக்கின்றனர். ஆச்சரியமாக இதில் நிஷா இவர்கள் தத்து எடுத்து வளர்க்கும் பெண் குழந்தை. அதேபோல இரண்டு மகன்களும் வாடகைத்தாய் முறையில் கருத்தரித்து பிறந்தவர்கள் என்பதும் இன்னொரு ஆச்சரிய செய்தி. சமீபத்தில் நடிகை சோஹா அலிகான் நடத்திய ஒரு நேர்காணலில் பங்கேற்ற போது, இந்த தகவலை கூறியுள்ளார் சன்னி லியோன்.
இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “எனக்கு ஆறு முறை குழந்தை கருத்தரித்து என் உடல் நிலை மற்றும் மருத்துவ காரணங்கள் காரணமாக அவை இறந்தே பிறந்தன. அப்போதுதான் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். அந்தசமயத்தில் எங்கள் முன்னால் கடவுளே கைகாட்டியது போல 18 மாத குழந்தையாக நிஷா வந்து நின்றாள். அவளைப் பார்த்ததும் இவள் தான் என்னுடைய மகள் என்கிற உணர்வு உடனே தோன்றியது. சொல்லப்போனால் நாங்கள் அவளை தத்து எடுக்கவில்லை. அவள் தான் விரும்பி எங்களை தத்து எடுத்தாள். அதன் பிறகு வாடகை தாய் முறையில் இரண்டு மகன்கள் பிறந்தார்கள்” என்று கூறியுள்ளார்.