ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல நடிகை சன்னி லியோன், கேரளாவிலுள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவரிடத்தில் பணமோசடி செய்துள்ளதாக அவர் மீது கேரள டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவிலுள்ள பெரும்பாவூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீயாஸ். இவர் கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகை சன்னி லியோனிடம் ரூ.29 லட்சம் அளித்திருக்கிறார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட சன்னிலியோன் சொன்னபடி குறித்த நாளில் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லையாம்.தற்போது டிவி தொடரில் நடிப்பதற்காக கேரளாவில் முகாமிட்டுள்ள சன்னிலியோன் மீது ஸ்ரீயாஸ் காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார்.
அதையடுத்து, திருவனந்தபுரம் பூவாரில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில் தங்கியிருக்கும் சன்னிலியோனிடம் கேரளா போலீஸ் விசாரித்துள்ளனர். அப்போது கொரோனா தொற்று காரணமாகவே குறிப்பிட்ட அந்த தேதியில் தன்னால் ஸ்ரீயாஸ் அழைத்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்று சன்னிலியோன் தனது சார்பில் விளக்கம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.