காதலர் தினத்தில் காஷ்மீரில் ஹோட்டல் திறக்கும் கங்கனா | உலக அளவில் முதலிடம் பிடித்த அல்லு அர்ஜுனின் புஷ்பா- 2! | டிஆர்பி-யில் சிரஞ்சீவி, பிரபாஸை பின்தள்ளிய சிவகார்த்திகேயன்! | தெலுங்கில் மந்தமான வசூலில் அஜித்தின் விடாமுயற்சி! | சிப்பாய் விக்ரம் இல்லாமல் அமரன் வெற்றி முழுமை பெறாது! - ராஜ்குமார் பெரியசாமி | இளையராஜா பயோபிக் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | ஜூலை மாதம் மீண்டும் வருகிறது டைனோசர் | உயர்ந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பேன் : சஞ்சனா நடராஜன் | எனது உற்சாகத்திற்கு காரணம் கிரியா யோகா : ரஜினி | 'விடாமுயற்சி' படம் பார்த்த அனிருத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் |
பிரபல நடிகை சன்னி லியோன், கேரளாவிலுள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவரிடத்தில் பணமோசடி செய்துள்ளதாக அவர் மீது கேரள டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவிலுள்ள பெரும்பாவூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீயாஸ். இவர் கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகை சன்னி லியோனிடம் ரூ.29 லட்சம் அளித்திருக்கிறார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட சன்னிலியோன் சொன்னபடி குறித்த நாளில் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லையாம்.தற்போது டிவி தொடரில் நடிப்பதற்காக கேரளாவில் முகாமிட்டுள்ள சன்னிலியோன் மீது ஸ்ரீயாஸ் காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார்.
அதையடுத்து, திருவனந்தபுரம் பூவாரில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில் தங்கியிருக்கும் சன்னிலியோனிடம் கேரளா போலீஸ் விசாரித்துள்ளனர். அப்போது கொரோனா தொற்று காரணமாகவே குறிப்பிட்ட அந்த தேதியில் தன்னால் ஸ்ரீயாஸ் அழைத்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்று சன்னிலியோன் தனது சார்பில் விளக்கம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.