‛ஜனநாயகன்' படத்திற்கு சான்று அளிக்க சொன்ன உத்தரவுக்கு தடை : சிக்கலில் விஜய் படம் | அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் பட அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | ராஜ்குமார் பெரியசாமி படத்திற்காக ஸ்டைலிஷாக மாறும் தனுஷ் | ரசிகர்களை வீட்டு வாசலுக்கே வந்து வரவேற்று அழைத்துச் சென்ற பிரபாஸ் | விஜய், பிரபாஸை ஓவர்டேக் செய்த சாரா அர்ஜுன் | கலைக்கல்லூரியில் டாக்டர்களை தேடிய ஸ்ரீலீலா | பொங்கலுக்கு வருகிறது திரவுபதி 2 | ஆஸ்கருக்கு தேர்வான ‛டூரிஸ்ட் பேமிலி, காந்தாரா சாப்டர் 1, மகாவதார் நரசிம்மா' | ‛பராசக்தி'க்கு போட்டியாக ‛மஹாசக்தி' | மீண்டும் ஆயிரம் கோடி வசூலை எட்டுவாரா பிரபாஸ் |

பிரபல நடிகை சன்னி லியோன், கேரளாவிலுள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவரிடத்தில் பணமோசடி செய்துள்ளதாக அவர் மீது கேரள டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவிலுள்ள பெரும்பாவூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீயாஸ். இவர் கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகை சன்னி லியோனிடம் ரூ.29 லட்சம் அளித்திருக்கிறார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட சன்னிலியோன் சொன்னபடி குறித்த நாளில் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லையாம்.தற்போது டிவி தொடரில் நடிப்பதற்காக கேரளாவில் முகாமிட்டுள்ள சன்னிலியோன் மீது ஸ்ரீயாஸ் காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார்.
அதையடுத்து, திருவனந்தபுரம் பூவாரில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில் தங்கியிருக்கும் சன்னிலியோனிடம் கேரளா போலீஸ் விசாரித்துள்ளனர். அப்போது கொரோனா தொற்று காரணமாகவே குறிப்பிட்ட அந்த தேதியில் தன்னால் ஸ்ரீயாஸ் அழைத்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்று சன்னிலியோன் தனது சார்பில் விளக்கம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.