மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

தமிழ் திரையிசையில் வேகமாக வளர்ந்து வரும் இளம் இசை அமைப்பாளர் சாய் அபயங்கர். தற்போது 'பவழமல்லி' என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி உள்ளார். இதனை திங்க் மியூசிக் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் வெளியீட்டு விழா நடந்தது.
இதில் சாய் அபயங்கர் பேசியதாவது: நான் 45 வினாடிகள் மட்டுமே ஸ்கிராட்ச் இசையை இசைத்துக் காட்டினேன்; உடனடியாக மகேஷ் அதனை பவழமல்லி ஆல்பமாக கொண்டு வந்து விட்டார்.
எனது இசை அமைப்பில் 'கருப்பு' திரைப்படம் உலகளவில் ஏப்ரல் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. தனுஷின் 55வது படத்திற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. அல்லு அர்ஜூன், அட்லீ இணையும் திரைப்படத்திற்கும் இசையமைக்கிறேன்.
நான் நடிக்க போவதாக கூறுகிறார்கள். இன்று இங்கு கூடியிருக்கும் அனைவரும் எனது இசைக்காகவே வந்துள்ளனர்; அது எனக்கு எல்லாவற்றையும் அர்த்தப்படுத்துகிறது. நான் தொடர்ந்து கடின உழைப்பை செலுத்தி, சிறந்த இசையை வழங்குவதில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.
இன்று கலைஞர்கள் தங்கள் திறனை காட்ட பல தளங்கள் உள்ளன. அதே சமயம், நாம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். எனது பெற்றோருக்கு தொடர்ச்சியான உத்வேகமாக இருந்ததற்கு நன்றி; எனது வழிகாட்டிகளுக்கு வழிகாட்டியதற்கு நன்றி; அனைத்து இசை ஸ்ட்ரீமிங் தளங்களுக்கும் அவர்களின் ஆதரவுக்கும் நன்றி. என்றார்.