பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

மலையாள குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகரான கலாபவன் மணி மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் தனது வித்தியாசமான நடிப்பால் மகிழ்வித்தவர். தமிழில் ஜெமினி, வேல், எந்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர் கடந்த 2016ம் வருடம் மார்ச் மாதம் திடீரென காலமானார். அவருக்கு நிம்மி என்கிற மனைவியும் ஸ்ரீலட்சுமி என்கிற மகளும் இருக்கின்றனர். கலாபவன் மணி இறந்தபோது பத்தாம் வகுப்பு தேர்வு எழுத தயாராகிக் கொண்டிருந்த ஸ்ரீ லட்சுமி, தற்போது மருத்துவ படிப்பை முடித்து பணியாற்ற தயாராகி விட்டார். இந்த தகவலை கலாபவன் மணியின் சகோதரரான ராமகிருஷ்ணன் என்பவர் தற்போது தெரியப்படுத்தியுள்ளார்.
கலாபவன் மணிக்கு தனது சொந்த ஊரான சாலக்குடி பகுதியில் ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும் என்பதும் ஏழைகளுக்கு அதில் இலவச மருத்துவம் பார்க்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. அதை பல பேட்டிகளிலும் அவர் கூறியிருக்கிறார். அதேபோல தனது மகளை அதற்காகவே டாக்டர் ஆக்கி பார்க்க வேண்டும் என்கிற ஆசையும் அவருக்கு இருந்தது. அந்த வகையில் தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் விதமாக மருத்துவராகியுள்ளார் மகள் ஸ்ரீ லட்சுமி.