நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

ஜப்பான் படத்தின் தோல்விக்கு பிறகு ராஜு முருகன் இயக்கியுள்ள புதிய படம் 'மை லார்ட்'. இதில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கிறார். சைத்ரா ஆச்சார், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்போது 'மை லார்ட் ' கதைக்களம் குறித்து ராஜூ முருகன் ஒரு பேட்டியில் கூறியதாவது , " ஒரு தம்பதி வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தினால், அவர்கள் கையில் உள்ள ரேஷன் கார்டையும் பறித்து, எங்கையோ கொண்டு நிறுத்தினால் அவர்கள் என்ன பண்ணுவார்கள் என்பதை பற்றியது தான் படம். இயற்கை உங்களுக்கு தந்த பெயர் மனுஷன், மனுஷி. பெத்தவங்க வெச்ச பெயர் ஒண்ணு. ஆனால், உணர்ச்சிகளே இல்லாத ஒரு சிஸ்டத்துக்கு நீங்க வெறும் நம்பர், டோக்கன், ஓட்டு அவ்வளவு தான். ஆனால், அந்த நம்பரோ, டோக்கனோ, ஓட்டோ திருப்பி நின்னு ஒண்ணு பண்ணுனா அதுதான் மை லார்ட் படம்" என தெரிவித்துள்ளார்.