சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
நடிகர் அதர்வாவை தான் இயக்கிய பாணா காத்தாடி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ். நடிகை சமந்தாவையும் அந்த படத்தின் மூலம்தான் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து செம போத ஆகாத மற்றும் பிளான் பண்ணி பண்ணனும் ஆகிய படங்களை இயக்கினார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது வீட்டிற்கு வருகை தந்து தனது பெற்றோரை சந்தித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது குறித்து ஒரு தகவலை தெரியப்படுத்தி, ஸ்ருதிஹாசனுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார் பத்ரி வெங்கடேஷ். இது குறித்த புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“என் பெற்றோர் ஒரு முறை கூட சினிமா பிரபலங்களை அழைத்து வரும்படி சொன்னதில்லை. ஆனால் என் அம்மா மட்டும் ஸ்ருதியுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினார். அதை நிறைவேற்றிய ஸ்ருதிக்கு நன்றி” என்று கூறியுள்ளார் பத்ரி.
கடந்த 2018ல் ஸ்ருதிஹாசன், ஹலோ சகோ என்கிற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார். அதை இயக்கியவர் இந்த பத்ரி வெங்கடேஷ் தான். அது மட்டுமல்ல கமல் நடித்த அவள் அப்படித்தான் திரைப்படத்தையும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் ரீமேக் செய்வதற்காக சில முயற்சிகள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.