டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

சூர்யா நடிப்பில் அடுத்து கருப்பு படம் வெளியாக உள்ளது. இதுதவிர வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46வது படத்தில் நடித்து வருகிறார். அடுத்து சூர்யாவின் 47வது படத்தை இயக்குவது மலையாளத்தில் வெளியான 'ஆவேசம்' பட இயக்குனர் ஜித்து மாதவன் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை சூர்யா புதிதாக தொடங்கியுள்ள ‛ழகரம்' என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றார் என்கிறார்கள்.
இந்த படத்தில் கதாநாயகியாக நஸ்ரியா நடிக்கவுள்ளார் மற்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நஸ்லின் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் 8ம் தேதியன்று கேரளாவில் துவங்குகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா மீண்டும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்கிறார்கள்.