கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது சலார் மற்றும் தி ஐ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் அவ்வப்போது காதலருடனான புகைப்படங்களை வெளியிட்டு வருபவர். இசை, பாட்டு என பிஸியாகவும் உள்ளார். ஏற்கனவே தனது உடலில் தனது பெயரை தமிழில் பச்சை குத்தி உள்ளார் ஸ்ருதி. தற்போது அதன் அருகே முருகனின் வேலை டாட்டூவாக வரைந்திருக்கிறார்.
அது குறித்து ஸ்ருதிஹாசன் கூறுகையில், ‛‛பச்சை குத்துவதை நான் வழக்கமாக வைத்திருக்கிறேன். அந்த வகையில் ஆன்மிகம் சம்பந்தமான பச்சை குத்த வேண்டும் என்று நினைத்தபோது முருகப்பெருமானின் ஞாபகம் தான் வந்தது. முருக பெருமானின் வேலுக்கு என் இதயத்தில் எப்போதுமே ஒரு இடம் உண்டு. அதனால் தான் டாட்டூ மூலம் எனது பக்தியை வெளிப்படுத்தியுள்ளேன். அதோடு ஆன்மிகமானது என்னை பாதுகாப்பாகவும் அடக்கமாகவும் வைத்திருப்பதற்கு உதவுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.