கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது |
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது சலார் மற்றும் தி ஐ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் அவ்வப்போது காதலருடனான புகைப்படங்களை வெளியிட்டு வருபவர். இசை, பாட்டு என பிஸியாகவும் உள்ளார். ஏற்கனவே தனது உடலில் தனது பெயரை தமிழில் பச்சை குத்தி உள்ளார் ஸ்ருதி. தற்போது அதன் அருகே முருகனின் வேலை டாட்டூவாக வரைந்திருக்கிறார்.
அது குறித்து ஸ்ருதிஹாசன் கூறுகையில், ‛‛பச்சை குத்துவதை நான் வழக்கமாக வைத்திருக்கிறேன். அந்த வகையில் ஆன்மிகம் சம்பந்தமான பச்சை குத்த வேண்டும் என்று நினைத்தபோது முருகப்பெருமானின் ஞாபகம் தான் வந்தது. முருக பெருமானின் வேலுக்கு என் இதயத்தில் எப்போதுமே ஒரு இடம் உண்டு. அதனால் தான் டாட்டூ மூலம் எனது பக்தியை வெளிப்படுத்தியுள்ளேன். அதோடு ஆன்மிகமானது என்னை பாதுகாப்பாகவும் அடக்கமாகவும் வைத்திருப்பதற்கு உதவுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.