பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? | பிளாஷ்பேக்: புதுப்புது அனுபவங்களோடு 'த்ரில்லர்' கதையாக வந்து, திகைப்பில் ஆழ்த்திய சிவாஜியின் “புதியபறவை” | மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனரின் அடுத்த படம் | காதல் கொண்டேன் 2 வரும் : சோனியா அகர்வால் தகவல் | ஒரே வாரத்தில் 17 மில்லியன் பார்வைகளைப் பெற்ற 'மோனிகா' பாடல் | எளிமையாக நடந்த தலைவன் தலைவி வெற்றி விழா |
தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஸ்ருதிஹாசன் நடித்த வால்டேர் வீரய்யா, பாலகிருஷ்ணா உடன் நடித்த வீர சிம்ஹா ரெட்டி போன்ற படங்கள் திரைக்கு வந்து விட்ட நிலையில், தற்போது கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் நடித்து வருகிறார்.
இதுதவிர தி ஐ என்ற ஆங்கிலப் படத்திலும் நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். சலார் படத்தில் இதுவரை நடித்திராத ஒரு மாறுபட்ட வேடத்தில் தான் நடித்து வருவதாக ஏற்கனவே தெரிவித்திருந்த ஸ்ருதிஹாசன் தற்போது அப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் தான் அந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதாக தனது சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வெளியிட்டு இருக்கிறா.
அதோடு இயக்குனர் பிரசாந்த் நீல், ஒளிப்பதிவாளர் புவன் ஆகியோருடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார். 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் சலார் படம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.