'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் மற்றும் பி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை சூர்யாதேவி பாபு தயாரிக்கிறார். இப்படத்தினை நக்கீரன், ஆனந்த் இணைந்து இயக்குகின்றனர்.
இரண்டு நாயகர்களை மையமாக வைத்து உருவாகிறது. சந்தோஷ் பிரதாப் மற்றும் 'அப்புச்சி கிராமம்' படத்தில் நடித்த பிரவீன் ஆகியோர் நாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக இரு நாயகிகள் நடிக்கின்றனர். இதற்கான நாயகி தேர்வு நடந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சூர்யா தேவி தானே ஒரு நாயகியாக நடிக்க முடிவு செய்து விட்டார், இன்னொரு நாயகியை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
பொழுதுபோக்கு மற்றும் கிரைம் திரில்லராக உருவாக இருக்கிறது. ஸ்ரீவேனுவாசன் ஒளிப்பதிவு செய்கிறார். சாம்சன் இசையமைக்கிறார்.