ஜூலை 6ல் ராயன் இசை வெளியீட்டு விழா | ரிலீஸிற்கு முன்பே விருதுகளைக் குவிக்கும் ‛கொட்டுக்காளி' திரைப்படம் | ஹிந்திக்கு செல்லும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர் | நித்திலன் இயக்கத்தில் நயன்தாரா | சூர்யா, ரவிக்குமார் படம் எப்போது துவங்கும்? | சிறையில் குடும்பத்தினரிடம் கதறி அழுத தர்ஷன் | இந்தியன் 2 படத்தில் பயன்படுத்தப்பட்ட ஏஐ டெக்னாலஜி | 'தங்கலான், கங்குவா' படங்களுக்குக் கொடுக்கப்படும் செம 'பில்ட்-அப்' | திருமணத்திற்கு பின் மணமகள் சீரியலில் ரீ- என்ட்ரி கொடுத்த திருமகள் நடிகை | சரிகமப நிகழ்ச்சியில் ரசிகர்களை நெகிழச் செய்த ஆட்டோக்காரர்! |
இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் உடல்நல பிரச்னையால் சென்னையில் காலமானார். தஞ்சையை சேர்ந்த பிரவீண் ஒரு கீபோர்டு கலைஞர். தமிழ் சினிமாவில் இராக்கதன், மேதகு, கக்கன், பம்பர், ராயர் பரம்பரை போன்ற படங்களுக்கு இசையமைத்தார். சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வந்த பிரவீண் குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மதியம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 6:30 மணியளவில் மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 6 மணியளவில் நடக்கிறது. இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமாரின் மரணம் திரையுலகினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.