'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி |

கவுதம் மேனனிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து வந்த சரங் தியாகு இயக்கி உள்ள படம் 'ஆரோமலே'. இப்படத்தில் கிஷன் தாஸ், ஷிவாத்மிகா, ஹர்ஷத் கான், விடிவி கணேஷ் நடித்திருந்தனர். மினி ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. சித்து குமார் இசையமைத்துள்ளார். கடந்த 7ம் தேதி படம் வெளியானது.
இந்த படத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. 'ஆரோமலே' என்ற டைட்டில்கூட 'விண்ணைத்தாண்டி வருவாயா' பட பாடலின் வரிதான்.
இந்த நிலையில், 'ஆரோமலே' படத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் இடம் பெற்றிருந்த பாடலை பயன்படுத்தியதாக அந்த படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இசை மற்றும் காட்சிகளை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.