தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து தற்போது மகேஷ் பாபு நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ராஜமவுலி. அவரது படங்களில் தொடர்ந்து அவருக்கு பக்கபலமாக நின்று இசையமைத்து வருபவர் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி. தற்போது ராஜமவுலியன் இந்த புதிய படத்திற்கும் இசைப் பணிகளை துவங்கி மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இந்த படத்திற்கான முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடலை நடிகை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். குளோப் ட்ரோட்டர் என இந்த பாடலுக்கு வைக்கப்பட்ட டைட்டில் தான் படத்தின் டைட்டிலாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கீரவாணியுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் ஸ்ருதிஹாசன்..
இது குறித்து அவர் கூறும்போது, “கீரவாணியுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். என்ன ஒரு பவர்புல்லான டிராக் அது.. நான் கீரவாணி சாரின் முன்பாக அமைதியாக அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். எப்போதுமே அவர் விக்னேஸ்வர மந்திரத்தை சொல்லித்தான் எதையும் ஆரம்பிப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படித்தான் இப்போதும் அவர் ஆரம்பிக்க போகிறார் என்று நினைத்தால் ஆச்சரியமாக என் தந்தையின்(கமல்) பாடல் ஒன்றை பாடி அவர் துவங்கியது எனக்கு உண்மையிலேயே ஸ்பெஷல் சர்ப்ரைஸ் ஆக இருந்தது” என்று கூறியுள்ளார்.