தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

புட்டபர்த்தி சாய்பாபாவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் மகிமை சொல்லும் படமாக வருகிறது ‛அனந்தா'. இதை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி உள்ளார். சுஹாசினி, ஜெகபதிபாபு, நிழல்கள் ரவி, அபிராமி, ஒய்ஜிமகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பாடலாசிரியர் பா.விஜய் பேசியதாவது :
‛‛அனந்தா ஒரு திரை படைப்பு என்பதை விட இறை படைப்பு என்று சொன்னால் சரியாக இருக்கும். எனது திரைப்பயணத்தில் இறைவனை பற்றி நிறைய பாடல்களை எழுதி உள்ளேன். ஆனால் நேரடியாக இறைவனுக்கே பாடல்கள், வசனம் எழுதியது இதில் தான். இந்த வாய்ப்பை தந்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிற்கு நன்றி. இது ஒரு பட வாய்ப்பு என்பதை விட இது ஒரு காலத்தின் பதிவு, திரைக்காவியம். இதில் எனக்கும் ஒரு பங்களிப்பு இருப்பது இறைவன் அளித்த பாக்கிம். இசையமைப்பாளர் தேவா உடன் எப்போது பேசினாலும் ஆன்மிகம் சார்ந்து தான் எங்கள் உரையாடல் துவங்கும். இந்த படம் முழுக்கவே எங்களுக்குள் ஆன்மிக பயணமாக இருந்தது.
இந்த படத்தின் தயாரிப்பாளர் கிரிஷ் உடன் ஆரம்பத்தில் பழக கொஞ்சம் பயமாக இருந்தது. என்னிடம் பேசிக் கொண்டே இருப்பார், திடீரென நான் பாபாவிடம் பேசிவிட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு பாபா இப்படி சொன்னார் என்பார். அவர் பாபாவை நேசிப்பதை விட சுவாசிக்கிறார் என புரிந்து கொண்டேன். முதன்முறையாக எங்களை புட்டபர்த்திக்கு அழைத்து போய் அந்த மண்ணில் தான் ஆரம்பிக்கணும் என ஆரம்பித்தோம். இந்த படத்தின் மூலம் ஒரு ஆன்மிக சுற்றுலாவே சென்று வந்தது போன்று இருந்தது.
பாபாவின் பக்தர்கள் வீட்டிற்கு எல்லாம் சென்றோம். அவர்களை பார்த்தபோது பாபாவை அவர்கள் வணங்கவில்லை, வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தில் மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையே நடக்கும் உரையாடல்களை வசனமாக எழுதுவது சவாலாக இருந்தது. நிபந்தனையற்ற பிரார்த்தனைகள் தான் பாபாவின் சன்னதியில் நிறைவேற்றப்படும். அவரை நம்பினால் கைவிடுவதில்லை என்பது தான் பாபா இந்த உலகத்திற்கு சொன்ன விஷயம். அது தான் இந்த திரைப்படம் சொல்லும் ஒரு சரித்திரம் ஆகும்''.
இவ்வாறு அவர் பேசினார்.