பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் | படையப்பா ரீ ரிலீஸில் வசூல் எவ்வளவு தெரியுமா? |

பிரபலமான பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான சீக்யா எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து தமிழ் படம் இயக்குகிறார் கார்த்திக் சுப்பராஜ். இந்தியாவின் முதல் ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படமான தி எலிபண்ட் விஸ்பரர்ஸ், தி லஞ்ச்பாக்ஸ், மசான், பாக்லைட் மற்றும் சமீபத்தில் தேசிய விருது பெற்ற 'காதல்' போன்ற பல படங்களை தயாரித்த நிறுவனம் இது. குனீத் மோங்கா கபூர், அச்சின் ஜெயின் ஆகியோரின் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனம்.
இதுகுறித்து கார்த்திக் சுப்பராஜ் கூறும்போது “சீக்யா தயாரித்திருக்கும் படங்கள் அனைத்தையும் நான் ரசித்திருக்கிறேன். நான் திரைக்கு கொண்டு வர வேண்டும் என விரும்பும் கலையுடன் சீக்யாவின் ரசனையும் ஒத்துப்போகிறது. விருதுகளுக்கு அர்த்தமுள்ள, தகுதியான படங்களைத் தயாரித்த குனீத் மற்றும் அச்சினுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. நான் எழுதியிருக்கும் இந்தக் கதை என் மனதுக்கு நெருக்கமானது. அந்தக் கதைக்கான சரியான தயாரிப்பாளர்கள் கிடைத்துள்ளனர்” என்றார்.