ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

பிரபலமான பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான சீக்யா எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து தமிழ் படம் இயக்குகிறார் கார்த்திக் சுப்பராஜ். இந்தியாவின் முதல் ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படமான தி எலிபண்ட் விஸ்பரர்ஸ், தி லஞ்ச்பாக்ஸ், மசான், பாக்லைட் மற்றும் சமீபத்தில் தேசிய விருது பெற்ற 'காதல்' போன்ற பல படங்களை தயாரித்த நிறுவனம் இது. குனீத் மோங்கா கபூர், அச்சின் ஜெயின் ஆகியோரின் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனம்.
இதுகுறித்து கார்த்திக் சுப்பராஜ் கூறும்போது “சீக்யா தயாரித்திருக்கும் படங்கள் அனைத்தையும் நான் ரசித்திருக்கிறேன். நான் திரைக்கு கொண்டு வர வேண்டும் என விரும்பும் கலையுடன் சீக்யாவின் ரசனையும் ஒத்துப்போகிறது. விருதுகளுக்கு அர்த்தமுள்ள, தகுதியான படங்களைத் தயாரித்த குனீத் மற்றும் அச்சினுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. நான் எழுதியிருக்கும் இந்தக் கதை என் மனதுக்கு நெருக்கமானது. அந்தக் கதைக்கான சரியான தயாரிப்பாளர்கள் கிடைத்துள்ளனர்” என்றார்.