எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
திரைப்படங்கள் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப தொழில்நுட்பங்களை அப்டேட் செய்து கொள்வது போல, அதை திருட்டுத்தனமாக வெளியிடுவோரும் ஏதோ ஒரு விதத்தில் இப்போதும் தொடர்ந்து புதிதாக ரிலீஸ் ஆகும் படங்களின் பைரசி வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். புதிய படங்கள் வெளியாகும் அன்றே இணையதளத்தில் அந்த படங்கள் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. அப்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான குருவாயூர் அம்பல நடையில் என்கிற படமும் இதேபோன்று இணையத்தில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டது. இது குறித்து படத்தின் தயாரிப்பாளரும் பிரித்விராஜின் மனைவிமான சுப்ரியா மேனன் காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்ததுடன் திருவனந்தபுரம், கொச்சி ஆகிய பகுதிகளில் உள்ள திரையரங்கு ஊழியர்களிடம் இது குறித்து கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினர். அப்படி சமீபத்தில் வெளியான தனுஷின் ராயன் திரைப்படம் திருவனந்தபுரம் திரையரங்கு ஒன்றில் திரையிடப்பட்டு ஓடிக் கொண்டிருந்த நிலையில் அங்கே கொச்சியை சேர்ந்த ஸ்டீபன் என்கிற நபர் படத்தை தனது மொபைல் போனில் படம் பிடித்ததை திரையரங்கு ஊழியர்கள் கையும் களவுமாக கண்டுபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவர் இப்படி தொடர்ந்து படங்களை திரையரங்குகளில் படம் பிடித்து மதுரையில் உள்ள சிலரிடம் விற்பனை செய்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.