நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கில் பிஸியான முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இன்னொரு பக்கம் தனது நண்பரும் காதலருமான சாந்தனு ஹசாரிகவுடன் லிவிங் டுகெதர் முறையில் வசித்து வருகிறார். 35 வயதை தாண்டியும் இன்னும் திருமணம் குறித்து எந்தவித தகவலையும் ஸ்ருதிஹாசன் வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில் புகைப்பட கலைஞர் ஒருவர் ஸ்ருதிஹாசனும் சாந்தனுவும் திருமணம் செய்து கொண்டார்கள் என ஒரு பதிவை சோசியல் மீடியாவில் வெளியிட்டார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன், “நான் என்னுடைய வாழ்க்கை முறையை எப்போதுமே உங்களிடம் ஒளிவு மறைவாக வைத்ததில்லை. கல்யாணம் என்றால் சொல்லாமலா இருக்கப் போகிறேன் ? நிச்சயமாக சொல்லிவிட்டுத்தான் செய்வேன். இந்த செய்தியை பரப்பும் யாரோ ஒருவர் இதை புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் சம்பந்தப்பட்ட புகைப்படக்காரர் ஒரு நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசனை புகைப்படம் எடுத்தபோது தன்னிடம் அவர் கடுமையாக நடந்து கொண்டார் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதனால் அவர் மீது உள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் இது போன்ற தகவலை அவர் பரப்பியுள்ளார் என்றே சொல்லப்படுகிறது.