புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கில் பிஸியான முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இன்னொரு பக்கம் தனது நண்பரும் காதலருமான சாந்தனு ஹசாரிகவுடன் லிவிங் டுகெதர் முறையில் வசித்து வருகிறார். 35 வயதை தாண்டியும் இன்னும் திருமணம் குறித்து எந்தவித தகவலையும் ஸ்ருதிஹாசன் வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில் புகைப்பட கலைஞர் ஒருவர் ஸ்ருதிஹாசனும் சாந்தனுவும் திருமணம் செய்து கொண்டார்கள் என ஒரு பதிவை சோசியல் மீடியாவில் வெளியிட்டார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன், “நான் என்னுடைய வாழ்க்கை முறையை எப்போதுமே உங்களிடம் ஒளிவு மறைவாக வைத்ததில்லை. கல்யாணம் என்றால் சொல்லாமலா இருக்கப் போகிறேன் ? நிச்சயமாக சொல்லிவிட்டுத்தான் செய்வேன். இந்த செய்தியை பரப்பும் யாரோ ஒருவர் இதை புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் சம்பந்தப்பட்ட புகைப்படக்காரர் ஒரு நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசனை புகைப்படம் எடுத்தபோது தன்னிடம் அவர் கடுமையாக நடந்து கொண்டார் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதனால் அவர் மீது உள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் இது போன்ற தகவலை அவர் பரப்பியுள்ளார் என்றே சொல்லப்படுகிறது.