மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கில் பிஸியான முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இன்னொரு பக்கம் தனது நண்பரும் காதலருமான சாந்தனு ஹசாரிகவுடன் லிவிங் டுகெதர் முறையில் வசித்து வருகிறார். 35 வயதை தாண்டியும் இன்னும் திருமணம் குறித்து எந்தவித தகவலையும் ஸ்ருதிஹாசன் வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில் புகைப்பட கலைஞர் ஒருவர் ஸ்ருதிஹாசனும் சாந்தனுவும் திருமணம் செய்து கொண்டார்கள் என ஒரு பதிவை சோசியல் மீடியாவில் வெளியிட்டார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன், “நான் என்னுடைய வாழ்க்கை முறையை எப்போதுமே உங்களிடம் ஒளிவு மறைவாக வைத்ததில்லை. கல்யாணம் என்றால் சொல்லாமலா இருக்கப் போகிறேன் ? நிச்சயமாக சொல்லிவிட்டுத்தான் செய்வேன். இந்த செய்தியை பரப்பும் யாரோ ஒருவர் இதை புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் சம்பந்தப்பட்ட புகைப்படக்காரர் ஒரு நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசனை புகைப்படம் எடுத்தபோது தன்னிடம் அவர் கடுமையாக நடந்து கொண்டார் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதனால் அவர் மீது உள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் இது போன்ற தகவலை அவர் பரப்பியுள்ளார் என்றே சொல்லப்படுகிறது.