இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் |
ராம்தேவ் இயக்கத்தில் கே.பாக்யராஜ், சோனியா அகர்வால், நடித்துள்ள 'மூன்றாம் மனிதன்' என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் பிரணா. படம் நாளை வெளிவருகிறது. முதல் படத்திலேயே 8 வயது மகனுக்கு தாயாக நடித்திருகிறார்.
இதுகுறித்து பிரணா கூறும்போது “இந்த படம் பட்ஜெட் படம் என்பதைவிட நிறைய பேருடைய உழைப்பு இதில் இருக்கிறது. நிறைய புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். நானே ஒரு புதுமுகம்தான். நிறைய கெட்டப், நிறைய நடிப்பு முக்கியமாக இந்த சமுதாயத்துக்கு தேவைப்படுகிற ஒரு கதை இந்த படத்தில் இருக்கிறது.
நடைமுறையில் இருக்கிற ஒரு சம்பவத்தை கதையாக உருவாக்கி இருக்கிறோம். இது ஒரு நீண்ட நாள் படைப்பு, கஷ்டபட்டு உருவாக்கி இருக்கிறோம். இதுபோன்ற சின்ன படங்கள் தியேட்டர்ல மக்கள் பார்க்காமல் அப்படியே போய் விடுகிறது. சின்ன படமோ, பெரிய படமோ அதை மக்கள் தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும்'' என்றார்.