வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து 'மேயாத மான்' படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர். பின்னர் 'கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், யானை, திருச்சிற்றம்பலம், ரத்னம், டிமான்டி காலனி -2' என பல படங்களில் நடித்துள்ள பிரியா பவானி சங்கர் தற்போது 'டிமான்டி காலனி-3' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் நடிகைகள் தாங்கள் காதலில் விழுந்தாலும் அந்த செய்தி வெளியானால் மார்க்கெட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சீக்ரெட்டாக வைத்திருப்பார்கள்.
ஆனால் பிரியா பவானி சங்கரோ, கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே ராஜவேல் என்பவரை தான் காதலித்து வருவதை ஆரம்பத்திலேயே அறிவித்தார். அதோடு கடந்த சில மாதங்களாக அவர் காதலரை பிரேக் அப் செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அது வதந்தி என்பதை கூறும் வகையில், தற்போது காதலருடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையப் பக்கத்தில் வெளியிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி உள்ளார் பிரியா பவானி சங்கர்.




