மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து 'மேயாத மான்' படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர். பின்னர் 'கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், யானை, திருச்சிற்றம்பலம், ரத்னம், டிமான்டி காலனி -2' என பல படங்களில் நடித்துள்ள பிரியா பவானி சங்கர் தற்போது 'டிமான்டி காலனி-3' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் நடிகைகள் தாங்கள் காதலில் விழுந்தாலும் அந்த செய்தி வெளியானால் மார்க்கெட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சீக்ரெட்டாக வைத்திருப்பார்கள்.
ஆனால் பிரியா பவானி சங்கரோ, கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே ராஜவேல் என்பவரை தான் காதலித்து வருவதை ஆரம்பத்திலேயே அறிவித்தார். அதோடு கடந்த சில மாதங்களாக அவர் காதலரை பிரேக் அப் செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அது வதந்தி என்பதை கூறும் வகையில், தற்போது காதலருடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையப் பக்கத்தில் வெளியிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி உள்ளார் பிரியா பவானி சங்கர்.