அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் | இனி ஹீரோ தான்: நடிகர் சூரி 'பளீச்' | பிளாஷ்பேக்: சர்வதேச விருதினை வென்றெடுத்த முதல் தமிழ் திரைப்படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்” | ஜுன் மாதத்தில் 4 பான் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் | 'விக்ரம்' டிரைலர் சாதனையை முறியடித்த 'தக் லைப்' டிரைலர் | நயன்தாரா நடிப்பது பற்றிய வீடியோ, 'இவ்ளோ சுமாரா' எடுத்திருக்க வேண்டுமா? | ஆட்டுக்கார அலமேலு, முத்து, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் - ஞாயிறு திரைப்படங்கள் | தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் |
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களின் தொடர் வெற்றியை தொடர்ந்து அந்த படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக தற்போது பிரபாஸ் நடித்து வரும் சலார் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஒப்புக்கொண்டு நடிக்க ஆரம்பித்த பின்னர், அவர் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோருடன் ஜோடியாக நடித்த வால்டர் வீரய்யா மற்றும் வீரசிம்ஹா ரெட்டி ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகி வெற்றியும் பெற்று விட்டன. இந்த நிலையில் தற்போது தான் சலார் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் ஸ்ருதிஹாசன்.
இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து ஸ்ருதிஹாசன் கூறும்போது, “இந்தப் படத்தில் ஆத்யா கதாபாத்திரமாக என்னை உருவாக்கியதற்கு இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு நன்றி . அதேபோல அற்புதமான மனிதரான டார்லிங் பிரபாஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் புவன் ஆகியோருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. இப்படிப்பட்ட ஒரு சிறப்பான படத்தில் கிடைத்த பாசிட்டிவான எண்ணங்கள், பணியாற்றிய அனுபவம் எல்லாமே ஒரு குடும்பத்தில் இருப்பது போன்ற உணர்வை கொடுத்தது” என்று கூறியுள்ளார். மேலும் இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் ஒளிப்பதிவாளருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.