7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

சமீபகாலமாக இந்திய சினிமாவில் கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வேண்டும் என்று கதாநாயகிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள். நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஹீரோவுக்கு இணையாக தனக்கு சம்பளம் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார் ஆனால், அதற்கு தனக்கு 20 வருடம் ஆனதாக கூறினார்.
சமீபத்தில் இதுகுறித்து நடிகை ஸ்ருதி ஹாசனிடம் கேட்டபோது, "பிரியங்கா சோப்ரா ஹீரோவுக்கு இணையான சம்பளம் பெற்று அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார்  அதுவும் ஹாலிவுட் ஹீரோவுக்கு இணையான சம்பளத்தை அவர் வாங்கியதாக கூறியது பெருமையாக உள்ளது.  சினிமா துறையில் கதாநாயகிகளுக்கு  சமமான சம்பளம் குறித்து எந்த பேச்சும் எழுவது இல்லை. கதாநாயகர்களுக்கு சமமான சம்பளம் கதாநாயகிகளுக்கு கிடைக்கும் நாள் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்'' என்று இவ்வாறு அவர் சு கேன்ஸ் பட விழாவில் பங்கேற்று போது கூறினார்.