இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
சமீபகாலமாக இந்திய சினிமாவில் கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வேண்டும் என்று கதாநாயகிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள். நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஹீரோவுக்கு இணையாக தனக்கு சம்பளம் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார் ஆனால், அதற்கு தனக்கு 20 வருடம் ஆனதாக கூறினார்.
சமீபத்தில் இதுகுறித்து நடிகை ஸ்ருதி ஹாசனிடம் கேட்டபோது, "பிரியங்கா சோப்ரா ஹீரோவுக்கு இணையான சம்பளம் பெற்று அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார் அதுவும் ஹாலிவுட் ஹீரோவுக்கு இணையான சம்பளத்தை அவர் வாங்கியதாக கூறியது பெருமையாக உள்ளது. சினிமா துறையில் கதாநாயகிகளுக்கு சமமான சம்பளம் குறித்து எந்த பேச்சும் எழுவது இல்லை. கதாநாயகர்களுக்கு சமமான சம்பளம் கதாநாயகிகளுக்கு கிடைக்கும் நாள் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்'' என்று இவ்வாறு அவர் சு கேன்ஸ் பட விழாவில் பங்கேற்று போது கூறினார்.