ஏவிஎம் சரவணன் மறைவு என் மனதை பாதிக்கிறது : ரஜினி | ஏவிஎம் சரவணனுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி | பிளாஷ்பேக்: 2 முறை படமான நல்ல தங்காள் கதை | ஏவிஎம் சரவணன் படத்தயாரிப்பை நிறுத்தியது ஏன்? | கை கட்டியபடி பேசுவார், வெள்ளை உடைகளை விரும்பி அணிவார்: பணிவுக்கும் உபசரிப்புக்கும் புகழ் பெற்ற ஏவி.எம்.சரவணன் | பிரபலங்கள் பட்டியல் 2025: தமிழ் நடிகர்கள், நடிகைகளுக்கு இடமில்லை… | சாய் பல்லவியால் மறுவாழ்வு பெற்றேன் ; இசையமைப்பாளர் நெகிழ்ச்சி | திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் |

ஏவிஎம் நிறுவனத்தில் ரஜினி நடித்த முதல்படம் ‛முரட்டுக்காளை'. அந்த படம் முதல் ‛சிவாஜி' வரை ஏவிஎம் தயாரிப்பில் பல படங்களில் நடித்துள்ளார். மறைந்த தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛பெரிய மனிதர். ஜென்டில்மேன் என்றால் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு சரவணன் தான். சினிமாவை உயிருக்கு உயிராக நேசிப்பவர். பத்து நிமிடம் பேசினால் அதில் அப்பச்சி... அப்பச்சி... என்று அவருடைய தந்தையை நினைவுபடுத்துவார். என் மீது நிறைய அன்பு வைத்தவர், எனது நல விரும்பி. எனது கஷ்ட காலங்களில் எல்லாம் என்னுடன் துணை நின்றவர். ஏவிஎம்மில் ஒன்பது திரைப்படங்கள் நடித்துள்ளேன், அந்த 9 படமும் ஹிட்.
எண்பதுகளில் முரட்டுக்காளை தமிழகத்தில் பிரம்மாண்டமாக வசூலை குவித்தது. 2000ம் ஆண்டுகளில் ‛சிவாஜி' மிகப்பெரிய படம் பிரமாண்டமான படம் வந்தது. 2020களில் பிரமாண்டமான படம் ஒன்று எடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அது நடக்கவில்லை, அவருடைய மறைவு எனது மனதை பாதிக்கிறது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.