ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
ராக்கி பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. இந்த படத்தில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு குற்றாலம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்புன் போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்கும் வகையிலும், புலிகள் சரணாலயம் அருகே குண்டு வெடிப்பது மாதிரியான காட்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. இது எதுவுமே முறையாக அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதாக தெரிகிறது. அதனால் இன்று மத்தளம் பாறையில் நடைபெற்ற கேப்டன் மில்லர் படப்பிடிப்பை தென்காசி கலெக்டர் நிறுத்தியுள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் இந்த செய்தி வைரலாகி வருகிறது.