பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் |

தெலுங்கில் இளம் ஹீரோக்களில் ஒருவரான ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகியுள்ள வரும் படம் ஆந்திரா கிங் தாலுகா. ஒரு ஹீரோவுக்கும், ரசிகனுக்கும் இடையேயான சுவாரசியமான விஷயங்களை மையப்படுத்தி சினிமா பின்னணியில் இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் ஆந்திராவின் சூப்பர் ஹீரோவாக கன்னட திரை உலகை சேர்ந்த நடிகர் உபேந்திரா நடித்துள்ளார்.
காந்தாவில் கவனம் ஈர்த்த பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நாடித்துள்ள இந்த படத்தை மகேஷ்பாபு பச்சிகொல்லா இயக்கி உள்ளார். இந்த படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி பெங்களூரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஹீரோ ராம் பொத்தினேனி, “இந்த தெலுங்கு சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்திற்கு எதற்காக கன்னட திரை உலகைச் சேர்ந்த நடிகர் என்று சிலர் கேட்டார்கள். ஆனால் எங்களை பொறுத்தவரை உபேந்திரா எப்போதுமே தெலுங்கு சூப்பர் ஹீரோ தான். அவரது பல படங்கள் ஆந்திராவில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றுள்ளன. அவருக்கென தனி ரசிகர்கள் இருக்கின்றார்கள். சமீபத்தில் கூட அவரது படம் ஒன்று ஆந்திராவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அவர் ஒரு நடிகராக மட்டுமல்ல இந்த சமூகத்திற்கு தேவையான பொறுப்பான ஒரு கருத்தை சொல்பவராகவும் மிகப்பெரிய மரியாதையை எங்களிடம் பெற்றுள்ளார்” என்று கூறினார்.




