பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்துக்கு இன்னமும் நல்ல கதை கிடைக்கவில்லை. இயக்குனர் சுந்தர்.சி விலகிவிட்டார். அந்த படத்தை இயக்க வெங்கட்பிரபு, கார்த்திக் சுப்புராஜ் உட்பட பலர் ஆசைப்படுகிற நிலையில், விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தை இயக்கிய நித்திலனும் ரஜினிக்கு கதை சொல்லியிருக்கிறாராம். அந்த கதை ரஜினிக்கு பிடித்து இருப்பதாகவும் தகவல். ஆனால், இன்னமும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.
இதற்குமுன்பு பாரதிராஜா, விதார்த் நடித்த குரங்கு பொம்மை என்ற படத்தையும் இயக்கியவர் நித்திலன். விஜய்சேதுபதிக்கு மகாராஜா என்ற பெரிய வெற்றியை தேடித்தந்து, 100 கோடியையும் வசூலித்தது. 2024ம் ஆண்டு ஜூன் மாதம் அந்த படம் ரிலீஸ் ஆனது. ஆனாலும், இன்னமும் அவர் அடுத்த படத்தை தொடங்கவில்லை. பல ஹீரோக்கள் கால்ஷீட் கொடுக்காத நிலையில், அவர் இன்னொரு புதுமுக ஹீரோயின் நடிக்கும் படத்தை தொடங்க இருந்தார்.
இந்த சூழ்நிலையில் ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறார். இவரை தவிர, இன்னும் சிலர் ரஜினிக்கு கதை சொல்லியிருப்பதாக தகவல். கதை விஷயத்தில் ரஜினி எடுக்கும் முடிவே இறுதியானது என தயாரிப்பாளர் கமல்ஹாசன் சொல்லிவிட்டதால், ரஜினி எந்த கதையை ஓகே செய்யப் போகிறார் என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. ரஜினிக்கு கதை கேட்க தனி குழு, மானேஜர், நண்பர்கள் வட்டாரம் கிடையாது. அவர் மட்டுமே கதை கேட்டு முடிவு செய்வார்.