படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

கன்னட திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் இயக்குனரும் நடிகருமான உபேந்திரா மற்றும் நடிகை பிரியங்கா திரிவேதி. இதில் உபேந்திரா 'கூலி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பிரியங்கா திரிவேதி அஜித்துடன் 'ராஜா' மற்றும் விஜயகாந்த் நடித்த 'ராஜ்ஜியம்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இவர்கள் இருவரது மொபைல் போன்களும் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து அவர்களது மொபைல் போனிலிருந்து உறவினர் மற்றும் நட்பு வட்டாரத்திற்கு தங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி செய்தி அனுப்பிய மர்ம நபர்கள் வேறொரு வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்புமாறு சொல்லி கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் அளவில் மோசடியும் செய்தனர்.
இந்த விவரம் தெரிந்ததும் சைபர் கிரைமில் புகார் அளித்த உபேந்திரா மற்றும் பிரியங்கா திரிவேதி இருவரும் தங்களது மொபைல் போன்கள் ஹேக் செய்யப்பட்டதாக ரசிகர்கள் மற்றும் தங்களது நட்பு வட்டாரத்தை எச்சரித்து இருந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த மோசடி செயலில் ஈடுபட்ட பீஹாரை சேர்ந்த விகாஸ் குமார் என்பவரை பெங்களூரு சதாசிவ நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக இந்த மோசடி நபர்கள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு இதில் பீஹாரில் உள்ள தசரத் பூரை சேர்ந்த விகாஸ் குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. தற்போது விகாஸ் குமாரை கைது செய்துள்ள நிலையில் இதன் பின்னணியில் இன்னும் இது போன்ற மோசடிகளில் பீஹாரை சேர்ந்த 150 பேர் கொண்ட இளைஞர் குழு செயல்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பிலிருந்து ஒரு அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.