ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' | பிளாஷ்பேக் : சொந்த வாழ்க்கை கதையில் நடித்த சுதா சந்திரன் | பிளாஷ்பேக் : பத்மினி சகோதரிகள் போல், நாட்டியத்தில் ஜொலித்த சாயி சகோதரிகள் | 'மை டியர் சிஸ்டர்' என்ன மாதிரியான கதை | வெப் தொடரில் விஜய்சேதுபதி மகன் | நானும் ஐஸ்வர்யா ராஜேஷ் அப்பாவும் நண்பர்கள் : நடிகர் அர்ஜூன் | லாட்டரி சீட்டு பின்னணியில் 80களின் நடக்கும் கதை ‛ராபின்ஹுட்' |

மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் வரும் நவம்பர் 27ம் தேதி வெளியாக இருக்கும் படம் களம்காவல். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் விநாயகன் நடித்துள்ளார். இயக்குனர் ஜிதின் கே ஜோஸ் இயக்கியுள்ளார். படத்தை மம்முட்டியே தயாரித்துள்ளார். ஆச்சரியமாக மம்முட்டி வில்லன் கதாபாத்திரத்திலும் விநாயகன் ஒரு துப்பறியும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஆனால் முதலில் மம்முட்டியின் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் பிரித்விராஜ் தான் என்று சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார் படத்தின் இயக்குனர் ஜிதின் கே ஜோஸ்.
இது குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தின் கதையை எழுதும்போதே பிரித்விராஜை மனதில் வைத்து தான் எழுதினேன். ஆனால் அப்போது அவர் எம்புரான் படப்பிடிப்பில் பிசியாக இருந்தார். இந்த கதையை கேட்டுவிட்டு நிச்சயமாக இந்த கதாபாத்திரம் மம்முட்டிக்கு பொருத்தமாக இருக்கும். அவரிடம் சொல்லுங்கள் என்று சொன்னார். அவர் சொன்னது போலவே மம்முட்டிக்கு அந்த கதாபாத்திரமும் பிடித்துப்போய், அவர் நடிக்க ஒப்புக்கொண்டதுடன் படத்தை தயாரிக்கவும் முன் வந்தார். அதே சமயம் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகனை நடிக்க வைக்க சிபாரிசு செய்ததும் மம்முட்டி தான்” என்று கூறியுள்ளார்.




