பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கன்னட திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் இயக்குனரும் நடிகருமான உபேந்திரா மற்றும் நடிகை பிரியங்கா திரிவேதி. இதில் உபேந்திரா 'கூலி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பிரியங்கா திரிவேதி அஜித்துடன் 'ராஜா' மற்றும் விஜயகாந்த் நடித்த 'ராஜ்ஜியம்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இவர்கள் இருவரது மொபைல் போன்களும் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து அவர்களது மொபைல் போனிலிருந்து உறவினர் மற்றும் நட்பு வட்டாரத்திற்கு தங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி செய்தி அனுப்பிய மர்ம நபர்கள் வேறொரு வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்புமாறு சொல்லி கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் அளவில் மோசடியும் செய்தனர்.
இந்த விவரம் தெரிந்ததும் சைபர் கிரைமில் புகார் அளித்த உபேந்திரா மற்றும் பிரியங்கா திரிவேதி இருவரும் தங்களது மொபைல் போன்கள் ஹேக் செய்யப்பட்டதாக ரசிகர்கள் மற்றும் தங்களது நட்பு வட்டாரத்தை எச்சரித்து இருந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த மோசடி செயலில் ஈடுபட்ட பீஹாரை சேர்ந்த விகாஸ் குமார் என்பவரை பெங்களூரு சதாசிவ நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக இந்த மோசடி நபர்கள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு இதில் பீஹாரில் உள்ள தசரத் பூரை சேர்ந்த விகாஸ் குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. தற்போது விகாஸ் குமாரை கைது செய்துள்ள நிலையில் இதன் பின்னணியில் இன்னும் இது போன்ற மோசடிகளில் பீஹாரை சேர்ந்த 150 பேர் கொண்ட இளைஞர் குழு செயல்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பிலிருந்து ஒரு அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.